May 28, 2012

2 வது திருமணம்! அஸ்ஸாம் எம். எல். ஏ ருமியின் வாக்குமூலம்!!


குவஹாத்தி:”மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றேன்! யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை!” -2-வது திருமணம் புரிந்த அஸ்ஸாம் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத் தெரிவித்துள்ளார். 

அவர் தனது பெயரை ராபியா சுல்தானா என மாற்றியுள்ளார். அஸ்ஸாம் மாநிலம் போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத். இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.
இந்த நிலையில், பேஸ்புக் மூலம் ஜாக்கி ஸாக்கிர் என்பவர் அறிமுகமானார் என கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டதாம். இந்த நிலையில் ருமிநாத் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு ஜாகிரை திருமணம் புரிந்ததாக பரபரப்பான செய்தி வெளியானது.
முன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார்சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்த போது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். ஆனால் விசாரணையில் ருமி ஜாகிரை மணம்புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருபிரிவினர் இடையே வன்முறை வெடித்துவிடாமல் தடுப்பதற்காக சில்சார் பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தனது திருமணம் குறித்து ராபியா சுல்தானா என்ற ருமி நாத் கூறியது: ஸாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விரைவில் நான் விவாகரத்து கோரவுள்ளேன்.
அரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் இஸ்லாத்தை ஏற்றேன். அதன் பின்னரே திருமணம் புரிந்தேன். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கோ, ஸாக்கிரை நான் திருமணம் புரியவோ யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை. எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன்.
ருமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை சாக்காக வைத்து ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் சில்சார் பகுதியில் கலவரத்தை தூண்டலாம் என அஞ்சப்படுகிறது. சில ஹிந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனவாம். ஹிந்துத்துவா அமைப்பைச் சார்ந்த கைரி பாரத் என்பவன் ருமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவத்தை எரித்ததாக ஸீ நியூஸ் கூறுகிறது.

2 comments:

Anonymous said...

""ஹிந்துத்துவா அமைப்பைச் சார்ந்த கைரி பாரத் என்பவன்""

Nalla vaarthai prayogam. nalla irunga nallavre. :)

கபிலன் said...

முஸ்லிம் அல்லது கிறித்துவப் பெண்ணை இந்து வாலிபர் காதலித்தார். அப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். மணமகன் முஸ்லிமா அல்லது கிறித்துவரா மாறிட்டார். இது போல ஆயிரம் திருமணங்கள் நடக்குது. மதம் மாறினா தான் கல்யாணம்னு சொல்றப்போ...என்ன பண்ண முடியும். சிறு குழந்தைக்கு கூட தெரிந்த இந்த விஷயம், சிந்திக்கவும் குழுவிற்கு தெரியாமல் போனதா அல்லது வேண்டுமென்றே மறைத்து தனது நிஜ முகத்தை காட்டுகிறதா என்பதை பதிவைப் படிப்பவர்கள் தான் சொல்லணும். எது எப்படியோ மணமக்கள் நல்லா இருந்தா சரி.