Aug 21, 2011

வெளிநாட்டு நிதி, உள்ளூர் சங்பரிவாரங்களுடன் தொடரும் போராட்டம்!

AUG 22, புதுடெல்லி: அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது.

ஹஸாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹஸாரேவின் போராட்டத்தை கொளுக்கச் செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹஸாரேவின் போராட்டத்திற்கு பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்ப்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
ஹஸாரேவின் போராட்டத்திற்கு சைபர் உலகில் பெருமளவிலான பிரச்சாரம் நடைபெறுகிறது. எஸ்.எம்.எஸ், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியன வழியாக நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு அரவிந்த் கேஜ்ரவாலுடன் செயல்படும் அஸ்வதி முரளீதரனும், மனீஷ் ஸிஸோடியுமாவர்.

தகவல் உரிமைச்சட்டத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ’கபீர்’ என்ற அமைப்பின் எக்ஸ்க்யூட்டிவ் உறுப்பினர்தாம் கேஜ்ரவால். தற்போது ஹஸாரேவின் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை இவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியை கொலைச் செய்த கொலைக்கார கும்பலான ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், யுவமோர்ச்சா, ஏ.பி.வி.பி போன்றவையாகும். இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹஸாரேவுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.

யூத் எகைன்ஸ்ட் கரப்ட்(ஒய்.எ.சி), இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட்(ஐ.எ.சி) ஆகிய ஹஸாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவது சங்க்பரிவார அமைப்புகளாகும். ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால் ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹஸாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடுச்செய்கிறார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், ஏ.பி.வி.பியும் முக்கிய பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அதன் பங்கை வகிக்கும் என ராம் மாதவ் கூறுகிறார்.

ஹஸாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிப்பெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் தெரிவித்துள்ளார். ஹஸாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப்போவதாக பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார். முன்பு கறுப்புப்பணத்திற்கு எதிராக போராட ஹைடெக் யோகா குரு ராம்தேவை களமிறக்கி ஆதாயம் தேட முயன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சியை மத்திய அரசு முறியடித்திருந்தது.

** தங்களுக்கு படியாத அரசியல்வாதிகளை மிரட்டி பணிய வைக்கவும், தங்களுக்கு தேவையான சட்டங்களை உருவாக்கவும், அழிக்கவும், மாற்றவும் முடியும். பணியாதவர்களை தண்டிக்கவும் முடியும். தீவீரவாத RSS பின்ணணி கொண்ட ஹஜாரேவும் அவரது அடிப்பொடிகளும் நாளை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதிகளை மிரட்டி சிறுபான்மையினருக்கெதிரான சட்டங்களை இயற்றவைக்க மாட்டார்கள் என்பதற்கும், இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட சட்டங்களை நீக்க வைக்க மாட்டார்கள் என்பதற்கும் என்ன நிச்சயம்?

இப்போதே ஹஜாரேக்கு ஆதரவு தருபவர்களை கவனித்தால் பனியாக்களும் பிற உயர்சாதியினரும் இணைந்த இந்துத்துவ வாடை பயங்கரமாக வீசுவது நன்றாக தெரியும். நாட்டில் ஊழல் பெருகியதற்கு இடஒதுக்கீட்டில் வந்த அரசு அதிகாரிகளே காரணம் என அவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக சிந்தனை கொண்ட பல சமூகசேவகர்கள் அன்னாவிடம் இருந்து ஒதுங்கி இருப்பதற்கும் அதுதான் காரணம்.

ஒரே இடத்தில் அதிகாரம் அனைத்தும் குவிவது சர்வாதிகாரம் ஆகாதா? அதிகாரத்தை பரவலாக்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காக பணியாற்றுவது தானே ஜனநாயகம்? அந்த பிரதிநிதிகளை ஆட்டிவைக்கும் அதிகாரத்தை ஒரு 'குழு'விடம் கொடுப்பது உச்சக்கட்ட சர்வாதிகாரம் ஆகாதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச அதிகாரம் உள்ள பிரதமரையே லோக்பல் வரம்புக்குள் கொண்டு வருவது எவ்வளவு ஆபத்தான செயல்?

அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்கும் போதே ஒரு நாட்டில் இவ்வளவு ஊழல் நடக்கிறதென்றால் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டால் எவ்வளவு ஊழல் நடக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள். லோக்பல் பில் பெஞ்சில் உள்ளவர்கள் நல்லவர்களாக மட்டும் தான் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? வானத்தில் இருந்து வரும் தேவதூதர்களா அவர்கள்? அவர்களும் இந்தியர்கள் தானே? அன்னாவின் மீதே ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் இருக்கும் பட்சத்தில், நாளை வருபவர்கள் எம்மாத்திரம்? **

No comments: