Jul 25, 2011

ராம்தேவ் உதவியாளரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது!

JULY 26, புதுடில்லி: தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பால கிருஷ்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது.

தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா, நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக இவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, இவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நாட்டின் எல்லைப்புறங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்க போகிறேன் என்று வீரவசனம் பேசி கிளம்பிய பாபா ராம்தேவ் என்ற போலிசாமியார் இப்பொழுது எங்கே போனார் என்றே தெரியவில்லை.

No comments: