Jun 18, 2011

தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் ஒப்புதல்!

 JUNE 19, புது தில்லி: 2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய பிரதமர் அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் அவர் ராஜிநாமா செய்வார் என தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

2-ஜி விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட பழைய சர்ச்சை இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஏர்செல் விவகாரம் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி விட்டது. இது தொடர்பாக பிரதமருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தயாநிதி மாறனை விசாரிக்க, பிரதமரின் அனுமதி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சி.பி.ஐ. ஏற்கெனவே மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில், தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்வது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்துவதற்கு பிரதமர் அலுவலகம் சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் தலைமையும் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. இந்நிலையில் தயாநிதி மாறன் தானாகவே பதவியிலிருந்து விலக வேண்டும், அவ்வாறு விலக முன்வராவிட்டால், பிரதமர் அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.

2 comments:

vignaani said...

மனுவை தூக்கி எறிந்தும் பல மைல் தூரம் வந்து விட்டார்கள் இந்துக்கள் என்பதே நான் சொல்வது.
எட்டு வயது பெண்ணுக்கு திருமணம் என்று மனுவை சுட்டுவது பதிவு. அதை நூற்றாண்டு காலமாக நிறுத்தி விட்டார்களே; அதை என் எழுதுகிறீர்கள்
என்று தான் கேட்கிறேன். விதவை மறுமணம் கூட அதே போல் தான்; மனுவை தூக்கி எறிந்தாயிற்று. எனக்கென்னவோ ஆர் எஸ் எஸ் தூக்கி எறிந்தாலும், (அவர்கள் செய்ய மாட்டார்கள்; ஆனால் பல மாற்றங்களை மெளனமாக அங்கீகாரம் வழங்கி விட்டார்கள் ) பகுத்தறிவு வாதிகள் அதை பேசி பேசியே காலத்தை ஓட்டுவதில் இருந்து மாற மாட்டார்கள். (இஸ்லாமியத்தையும் கிருஸ்தவத்தையும் சுட்டிக் காட்டியதும் அவர்கள் தம் மனுவிடமிருந்து மாற விரும்பவில்லையே என்பதால் தான்)

vignaani said...

sorry for pinning to a wrong blog. pertains to another. sorry again