Jun 16, 2011

சனல் 4 காணொளி வழியாக புதிய போராட்ட யுக்தி!

JUNE 17, எம் இனத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எமது சொந்தங்களை திட்டமிட்ட இனப்படுகொலை செய்த கொடுங்கோல் இலங்கை அரசு.

 இதற்க்கு  எதிராகப் பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ் நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தைப் தமிழர்களாகிய நாம் நடைமுறைபடுத்த வேண்டும்.

அது எப்படி என்றால்? இலங்கை அரசால் தாயரிக்கப்பட்ட பொருள்களை நாம் வாங்காமல் புறக்கணிப்பதன் மூலம் இதை நம்மால் செய்யமுடியும். இந்த தீர்மானம் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு சனல் 4 காணொளி ஆகியவற்றை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இப்போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

1. இங்கு விற்பனைக்கு இறக்குமதி செய்யப்படும் சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்கள் எதுவாயினும் அவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும்.

2. சிறிலங்காவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் மொத்த அங்காடி உரிமையாளர்கள் அதே பொருட்களை வேறு நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து அதனை எமது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

3. தென்னாபிரிக்கா தேசிய விடுதலைப் போராட்ட காலத்தில் உலக நாடுகளில் இயங்கும் துறைமுகத் தொழிற் சங்கங்களைக் கொண்டு எப்படி ஏற்றுமதி இறக்குமதி இரண்டையும் தடுத்தனரோ அதேபோல நாமும் செய்யவேண்டும்.
4. நிறவெறி பிடித்த தென்னாபிரிக்க அரசை எப்படிப் பன்னாட்டு சமூகம் விளையாட்டுத்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் தனிமைப்படுத்தியதோ அதேபோல், தமிழினப்படுகொலை செய்த சிறிலங்காவையும் பன்னாட்டுச் சமூகத்திடமிருந்து நாம் தனிமைப்படுத்த வேண்டும்.

5. எமது வெளிநாட்டுப் பறப்புக்களை சிறிலங்கா விமான மூலம் மேற்கொள்வதை நாம் நிறுத்த வேண்டும்.

6. சனல் 4 காணொளி மட்டும் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையை உலகம் முழுவதும் பரப்ப முடியாது. ஆகவே நாமும் இந்தப் பரப்புரையை உலகம் அந்தந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த சனல் 4 DVD யை கொடுத்து எம்மவர்களின் இன அழிப்பை பார்வையிட கேட்கவேண்டும்.

7. அந்தந்த நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நாம் ( எம்மவர்களை கொண்டு ) தொடர்பு கொண்டு சனல் 4 காணொளியை மறு ஒளி ஒலிபரப்ப கோர வேண்டும்.

8. கீழ்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு கனேடியர்களுக்கு எம் இனத்திற்கு நடந்த இந்த கொடூர இன அழிப்பை பார்வையிட ஓர் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என கேட்க வேண்டும் ( கனடா) RADIO CBC 416.205.6301, 680 News 416 872 6397, AM 640 416.646.8640

CFRB 1010 416.924.6717 அதுபோல் TV CBC 426.205.6309 - CTV 416.384.5000 - Sun Tv 416.601.0010 - City Tv 416.599.2489 - CP 24 416.384.2400 - PRINT Toronto Star 416.869.4301 - National Post 416.386.2600 - Toronto Sun 416.947.2211 - பG & M 416.585.5000

அலை அலையாக தமிழ் மக்களாகிய நீங்கள் தொடர்பு கொண்டால் நிச்சயமாக இவர்கள் மறு ஒளி ஒலி பரப்புவார்கள் இதில் எந்த அச்சமும் இல்லை. ஆகவே தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். மறு ஒளிபரப்ப கோருங்கள். இந்த நாட்டு மக்களும் இந்த காணொளியை பார்வையிட்டு எம்து அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கட்டும்.

9. நாம் வாழும் நாடுகளின் அரசியல் தலைவர்கள், மத்திய, மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து சிறிலங்காவிற்கு எதிரான பொருளாதாரத் தடையைக் கொண்டு வருமாறு வற்புறுத்த வேண்டும். நாங்கள் எமது தொகுதி அரசியல்வாதிகளுக்கு இந்த சனல் 4 காணொளியை பார்வையிட தாழ்மையாக கேட்டுக் கொள்ளுங்கள்.

10. இலங்கையில் வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் இனத்தால், பேசும் மொழியால், சமயத்தால், பண்பாட்டால், வரலாற்றால் வேறுபட்டவர்கள் என்ற உண்மையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

இப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் எவரும் தனிப்பட்டமுறையில் பாதிக்கப்படவோ நஷ்டப்படவோ கூடாது அது வாடிக்கையாளர்களாக இருக்கட்டும்! மொத்த வியாபாரிகளாக இருக்கட்டும்! சில்லறை வியாபாரிகளாக இருக்கட்டும்.

மொத்த வியாபாரிகள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் இதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உதவ வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசிற்கு நாங்கள் உதவ வேண்டும்.

வாடிக்கையாளர்களை தயவு செய்து உங்கள் வியாபாரிகளிடம் சொல்லுங்கள் இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என அழுத்திக் கூறுங்கள். இனவாத இரத்தக்கறை படிந்த பொருட்களை புறக்கணிப்போம்!! புறக்கணிப்போம்!! இந்த சந்தா்ப்பம் இனிமேல் எமக்கு கிடைக்குமோ தெரியாது. ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நாம் இழக்காது பயன்படுத்துவோம்.

புலம் பெயர் தமிழா்கள் நாங்கள் தான் எம் இன விடுதலையையும் எம் மக்களையும் காப்பாற்றவேண்டும். ஒருவர் மீது ஒருவர் நாம் கல்வீசிவிட்டால் எமக்கு விடுதலை கிடைக்குமா? எம் மண்ணின் மீட்புக்காக தம் உயிரை அர்ப்பணித்த எம் மாவீரர்களை ஒரு கணம் சிந்தியுங்கள்.

இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு வாடிக்கையாளர்களின், வியாபாரிகளின், மொத்த வியாபாரிகளின் ஒத்துழைப்பும் இன்றி இது சாத்தியமற்றது. நாம் எல்லோரும் தமிழனாய் ஒன்றிணைந்து எமது கோபதாபங்களை ஓரம்கட்டி ஒருமித்து போராடுவோம்.

No comments: