May 5, 2011

இலங்கை துறைமுகத்தை புனரமைக்க இந்தியா உதவி!!

கொழும்பு, மே.5: தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் நிதி உதவியுடன் புனரமைக்க இலங்கை முடிவுசெய்துள்ளது.

இந்தியாவின் உதவியுடன் அந்த துறைமுகத்தை புனரமைக்கும் அதிபர் ராஜபட்சவின் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய அரசுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக உள்ளது. 2 கட்டமாக அந்த துறைமுகம் மேம்படுத்தப்பட உள்ளது.

துறைமுக விரிவாக்கம் இந்தியா, இலங்கை இடையே வர்த்தக மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிந்திக்கவும்: தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்து ஒரு மிகபெரிய இனப்படுகொலையை செய்துவிட்டு தமிழர்கள் வாழும் பகுதியில் வர்த்தகத்தை மேம்படுத்த துறைமுகம் கட்ட போகிறார்களாம்.

இந்தியா, இலங்கை இரண்டு போரும் போற்குற்றவாளிகள் இவர்கள் ராணுவ தேவைகளுக்கு துறைமுகம் அமைத்து மீதம் இருக்கும் தமிழர்களையும் அந்த நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு துரத்திவிட்டு சிங்கள நாடாக்கலாம் என்ற திட்டத்தின் ஒரு பகுதிதான் இது.

இந்தியாவில் மக்கள் பட்டினியில் சாவுகிரார்கள். குடிக்க தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல், சாலைவசதி, மருத்துவ இல்லாமல் இந்தியாவில் எத்தனையோ கிராமங்கள் இருகின்றன. இந்நிலையில் இந்திய மக்களின் வரிபணத்தை எடுத்து செலவு செய்வது ஒரு அராஜக செயல்.

No comments: