Apr 5, 2011

தமிழகத்துக்கு கருணாநிதி என்ன? செய்தார்!!

எப்ரல் 6, தஞ்சை மாவட்டம், பேராவூரணி தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் நடிகர் அருண் பாண்டியனை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பேராவூரணி தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கிடையாது. அடிப்படை வசதிகள் இல்லை. காவிரி பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அடிப்படை வசதி, குடிநீர் வசதிகளை ஜெயலலிதா நிவர்த்தி செய்வார்.

தி.மு.க.வினர் ஊர், ஊராக சென்று பொய் சொல்லி வருகிறார்கள். விஜயகாந்த் தனித்து நின்றால் அவர்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். நான் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து இருந்தால் கொண்டாடி இருப்பார்கள். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் திண்டாடி வருகிறார்கள்.

என்னை தி.மு.க.வோடு கூட்டணி சேர்க்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் நான் அ.தி.மு.க.வோடு தான் கூட்டணி என்று கூறிவிட்டேன். என்னைப்பற்றி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து குடிநீர் கொண்டுவந்து சென்னை மக்களின் தாகத்தை தீர்த்தார். கருணாநிதி 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார். அனைவருக்கும் கிடைத்ததா?

திருவாடானை தொகுதி மக்கள் அதற்கு தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர்ரகுமானுக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சி ஆட்சி அமைந்தால் குடிநீர் தட்டுப்பாடு, தடையில்லா மின்சாரம், மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு தமிழகம் ஒரு வளமையான பூங்காவனமாக, முதன்மை மாநிலமாக மாறும்’’ என்று பேசினார்.

No comments: