Apr 15, 2011

ஈழதமிழர் படுகொலை!! புதிய ஆதாரங்கள் சமர்ப்பிப்பு!!

ஏப்ரல் 15, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எழுபதினாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கு மேலாக இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 13 ஆயிரத்து நூற்றி முப்பது பேரளவிலானோர் காணாமற் போயுள்ளதாகவும் ஆதாரபூர்வமான புள்ளிவிபரங்கள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்காவின் மெக்ஸ்வல் கல்லூரியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரிவின் ஏற்பாட்டில் ஸ்ரகியூஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றிலேயே மேற்படி தகவல்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

பிரஸ்தாப கருத்தரங்கில் உரையாற்றிய அமைதிக்கான தமிழர் இயக்கத்தின் முக்கியஸ்தர் கலாநிதி அருள்நாதன் ஆற்றிய உரையின் போதே மேற்படி புள்ளிவிபரங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.

அதன் போது இலங்கையின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி கலாநித பாலித கொஹன, மற்றும் அமெரிக்க, இலங்கை அரசாங்கங்களின் பிரதிநிதிகளும் மேலும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

1 comment:

Anonymous said...

எவ்வளவோ ஆதாரங்கள் கிடைத்தபின்னும் இன்னும் இந்த கொலைவெறியரை நீதிக்கு முன் கொணருவதற்கு ஏன் தாமதம்??