Apr 21, 2011

திப்பு சுல்தான் 153 கோவில்கள் கட்டுவதற்கு உதவினார்!!

புதுடெல்லி: APRIL 22, ’இந்திய பத்திரிக்கை, தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களின் குறிப்பிட்ட திட்டங்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது.

திப்பு சுல்தான் போன்ற மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது. என உச்சநீதிமன்றதின் மூத்த தலமை நீதிபதியான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

அறிவுப்பூர்வமான-வளர்ச்சி மற்றும் எதிர்கால அமைதிக்கான வழிதடம் அமைத்தல் என்ற தலைப்பில் நிகழ்ந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

திப்பு சுல்தான் போன்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் 153 கோவில்கள் கட்டுவதற்கு பொருளாதார உதவிகள் செய்திருக்கிறார் என்ற வரலாற்று செய்திகளை எப்போதும் படித்திருக்க மாட்டீர்கள்” என நீதிபதி கட்ஜு கூறினார்.

இது போன்ற வரலாற்று செய்திகள் மதச்சார்பற்ற வரலாற்றாசிரியர்கள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மட்டுமே கூறிவந்துள்ளார்கள்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போன்றவர்கள் இத்தகைய வரலாற்று செய்திகளை வெளிப்படையாக கூறுவது இதுவே முதல் முறையாகும்.

உத்தரபிரதேசத்தைப் பற்றி கூறுகையில் அவ்தாஹ் பகுதீன் நவாப் மதசார்பற்ற நடுநிலையான அவரின் செயல்பாடுகளுக்காகவே பேசப்பட்டவர் என்று உதாரணங்களையும் மேற்கோள்காட்டி கூறினார்.

நம்முடைய இந்திய வரலாற்றில் இது போன்ற முக்கியமான பகுதிகள் மறைக்கப்பட்டது தான் இந்தியாவில் மத துவேச சக்திகள் வளர்ச்சியடைய காரணமாகின என கூறினார்.

ஆனால் இந்தியா பல்வேறு வேறுபாடுகள் கொண்ட கலாசாரங்கள் உள்ள நாடு மதச்சார்பற்ற தன்மை இல்லாமல் இந்தியாவில் வாழவே முடியாது என்றும் அவர் கூறினார்.

No comments: