
கூட்டணி விவகாரத்தில் இரண்டு பக்கமும் கதவுகளை திறந்து வைத்து, பேரம் பேசி, அதிக சீட்டுகளை பெற முடியும் என ராமதாஸ் கருதுகிறார்.
பா.ம.க., கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதா, வேண்டாமா என்பது குறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் தி.மு.க., பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்ய முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார். பா.ம.க., கேட்கும் தொகுதி எண்ணிக்கைக்கு அ.தி.மு.க., தரப்பில் இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. தே.மு.தி.க., முடிவுக்கு பின் பா.ம.க.,வை பற்றி யோசிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இம்மாதம் முதல் வாரத்தில் பா.ம.க., பொதுக்குழு கூடும் என தெரிகிறது. அக்கூட்டத்தில், கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment