Jan 5, 2011

ஹிந்துத்துவா சாமியார் அஸிமானந்தாவுக்கு மேலும் ஒரு வாரன்ட்.


அஜ்மீர்,ஜன.5:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவுக்கு எதிராக நீதிமன்றம் புதிய வாரண்டை பிறப்பித்துள்ளது. இந்த மாதம் 18-ஆம் தேதி அஸிமானந்தாவை ஆஜராக்க வேண்டுமென முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் ரத்தன் லால் முண்டு ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸிற்கு உத்தரவிட்டுள்ளார். 2007-ஆம் ஆண்டு நடந்த அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள அஸிமானந்தா தேசிய புலனாய்வு ஏஜன்சியில் கஸ்டடியில் உள்ளார். நேற்று அஸிமானந்தாவை ஆஜர்படுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அஸிமானந்தா 10 தினங்கள் என்.ஐ.ஏவின் கஸ்டடியில் இருப்பதாக ஏ.டி.எஸ் கூடுதல் சூப்பிரண்ட் சத்தியேந்திர ரணாவத் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

No comments: