Jan 10, 2011

போர்ப்படைக்கு உதவும்: "தேஜஸ்' முழு வெற்றி!!!

பெங்களூரு : இந்தியாவின் இலகு ரக விமானம் தேஜஸ், விமானப் படையிடம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் இந்த விமானம், போர்ப் படை பிரிவில் சேர்க்கப்பட உள்ளது. பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் இணைந்து, 1983ம் ஆண்டு 560 கோடி ரூபாய் முதலீட்டில் தேஜஸ் இலகு ரக விமான வடிவமைப்பு திட்டம் துவங்கின. தற்போது 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இத்திட்டத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்த விமானத்துக்கு, "தேஜஸ்' என பெயர் சூட்டினார். 98ம் ஆண்டு "பொக்ரான்' அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதால், அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக தேஜஸ் வடிவமைப்பில் பின்னடைவு ஏற்பட்டது.

No comments: