Jan 10, 2011

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் & தினமலர் ஒரு சமூக பார்வை.


குஜராத் மாநிலம் சூரத்தில், "மகர சங்கராந்தி திருவிழா' தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எ ஸ்.எ ஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசுகிறார். இது ஜனவரி 10 தேதி தினமலரில் படத்துடன் வந்த செய்தி. இதுதான் தினமலரின் மத துவேச சிந்தனை.
இந்தியா முழுவதும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் இருப்பதும், இவர்கள் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் 'தான்' இந்த குண்டு வெடிப்புகள் நடந்தது என்றும் நிருபிக்கபட்டு உள்ள இந்த சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை பற்றியோ, அல்லது அவர்களின் ஆணைபடி நடத்தபட்ட குண்டு வெடிப்புகள் பற்றியோ, எந்த செய்தியும் வெளியிடாமல் தினமலர் அமைதி காத்துவருகிறது. இது மட்டும் இல்லாமல் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற எண்ணத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாட்டை ஹிந்து மதத்தோடு தொடர்பு படுத்துவது போல் அவர்கள் 'தான்' ஹிந்து மதத்தின் ஒட்டு மொத்த பாதுகாவலர்கள் என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்த இந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை ஏதோ ஹிந்து மத சாது போல சித்தரிக்கும் வேலையை செய்து வருகிறது தினமலர் நாளேடு. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரல் இந்தியா முழுவது ஒழிக்க துடங்கி இருக்கும் இந்த நிலையில் தினமலர் அமைதிகாப்பது பத்திரிகை தர்மம் இல்லை.

அதுபோல் இந்த செய்திகளை வெளியிடாத, இதுபற்றி பேசாத யாரும், எந்த அமைப்பும், எந்த கட்சியும் நடுநிலை தவறியவர்களே. அது மட்டும் அல்லாமல் இவர்கள் இப்படி செயல் படுவதன் மூலம் இந்த பாசிச பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாகவே கருதபடுவர். அது மட்டும் அல்லாமல் இவர்களது தேசபக்தியை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு இவர்கள் உள்ளாக்க படுகிறார்கள். ஏன்? என்றால் இப்படி பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் பெரும் சவால் ஆகும். இதை சம்மந்த பட்டவர்கள் உணர்ந்து இது போன்ற செய்திகளை வெளிக்கொண்டு வருவது,அதை எதிர்ப்பது ஒவ்வொரு இந்தியன் மீதும் கடமையாகும். இவர்கள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்தானவர்கள். இவர்கள் செய்யும் மத தீவிரவாதம் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்கும் என்பதனை உணர்ந்து எல்லோரும் ஒன்று பட்டு குரல் கொடுப்போம். ஆர்.எஸ்.எஸ். என்ற நச்சு செடியை பிடுங்கி இந்தியா சிறப்பாக ஒளிர பாடுபடுவோம். மதசார்பின்மை காப்போம். வேற்றுமையில் ஒற்றுமை அதுவே இந்தியா!! என்று பெருமையோடு சொல்லுவோம். இதை செய்யவேண்டியது பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமை.

அன்புடன் : ஆசிரியர் சிந்திக்கவும்.

No comments: