
அந்த பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை இருந்தால், அவற்றிற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நவம்பர் 13ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்ட பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடந்தன. இங்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதுடன், புதிய விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இதில் ஏராளமானோர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment