
புவனேஸ்வரம்,ஜன.12:வாக்காளர் தகுதி வயதை 16 ஆக குறைப்பது குறித்து மத்திய அரசிடம் பரிந்துரைக்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார். ஒரிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.இளம் வயதிலேயே இளைஞர்கள் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தேர்ந்து விடுகின்றனர். எனவே, வாக்காளர் தகுதி வயதை 16 ஆக குறைப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment