Dec 8, 2010

வழுக்கை தலயில் முடிவளர சித்தவைத்திய முறை.


வழுக்கை தலையில் முடிவளர:

சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.


1 comment:

Anonymous said...

இவையெல்லாம் வெறுமே சித்த மருத்துவ புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டதாக இருப்பின் பயனில்லை. இதுபோன்ற மருத்துவ குறிப்புகள் ஏராளமாக என்னால் கூட கொடுக்க முடியும்.

அனுபவபூர்வமாக இது பயன் தந்ததா ? வழுக்கையர்கள் எத்தனைபேர் கீழாநெல்லி வேரை போட்டு காய்ச்சின தே.எண்ணெய் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள் ?

வேப்பிலை சாறு பயன்படுத்தியோ வெந்தயமும் குன்றிமணி பொடியும் ஊறவைத்த தே.எண்ணையை பயன்படுத்தியோ முடி உதிர்வது நின்று போனதாய் எத்தனை பேர் சொல்கிறார்கள் ?

உங்கள் பதிவை குறை சொல்வது என் நோக்கமல்ல. வெறும் ஏட்டுத்தகவலாக இந்த மருத்துவக்குறிப்புகள் நின்றுவிடக்கூடாது என்ற ஆதங்கத்தாலேயே சொல்கிறேன்.

அன்புடன்
முத்து