
அலைக்கற்றை கையிருப்பு மற்றும் ஒதுக்கீட்டு கொள்கை தொடர்பாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கபில் சிபில் இந்தத் தகவலை செவ்வாய்க்கிழமை கூறினார். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படாது. இப்போது கைவசம் உள்ள அலைக்கற்றையை தேவையான அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நுழைவு கட்டணமாக ரூ.1,658 கோடி மட்டுமே செலுத்தி உள்ளன. குறைந்த நுழைவுக் கட்டணமே கடந்த சில ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறை இந்த அளவு வளர்ச்சி கண்டதற்கு காரணம் என்றார் அவர். 2001-ம் தொலைத் தொடர்பு சேவையைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம். ஆனால் 2007-ல் இது 18.22 சதவீதமாக அதிகரித்தது. 2009-ல் இது 61 சதவீதத்தைத் தொட்டது என்றார் அவர். இதன்படி 72 கோடி பேர் செல்போனை பயன்படுத்துகின்றனர். இதற்கு குறைந்த அளவிலான நுழைவுக் கட்டணம்தான் காரணம் என்றார் அவர்.
தொலைத் தொடர்பு கொள்கையை அமல்படுத்துவதில் தவறு நடந்துள்ளதா என்று கேட்டபோது, பல நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதிலிருந்து தவறு நடந்துள்ளதாகத்தான் தெரிகிறது. தொலைத் தொடர்பு கொள்கையை உருவாக்குவது, கொள்கையை அமல்படுத்துவது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற மூன்று வகைகளில் இந்தப் பிரச்னை கவனிக்கப்பட்டு வருகிறது என்றார் கபில் சிபல்.
No comments:
Post a Comment