Nov 1, 2010

இணையதளத்தில் ஸ்யூஸ் மென்பொருளை பயன்படுத்தி கொள்ளையடித்த ரஷ்யர் குறித்த பரபரப்பு செய்தி.

வாஷிங்டன்,நா.1:இணையதள உலகின் மாபெரும் திருடனாக கருதப்படும் ஹேக்கர் ஓய்வு பெறுகிறார். பெரும் நிறுவனங்களின் மிகவும் ரகசியமான பாஸ்வேர்டுகளை திருடி பணக்கொள்ளை நடத்தும் கம்யூட்டர்கொள்ளைக்காரனான ஹேக்கர்களில் ஒருவர்தான்
ஓய்வு பெறும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஸ்யூஸ் என்ற ஆபத்தான மென்பொருளை பயன்படுத்தித்தான் இவர் இணையதளத்தில் ரகசிய கோடுகளை தகர்த்திருந்தார். வங்கிகளிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து அதன்மூலம் வாகனங்களும், கட்டிடங்களும் வாங்கிக் குவித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த இந்த தீவிரவாதி இப்பொழுதுகூட மர்மமாகத்தான் உள்ளார்.

ஆனாலும் இவருடைய மென்பொருளான ஸ்யூஸ் பிரசித்திப் பெற்றதாகும். இனிமேல் தான் இந்தத் தொழிலை நிறுத்தப்போவதாக ரஷ்யாவைச் சார்ந்த ஹேக்கர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க நகரங்களிலிருந்து பல்வேறு நிறுவனங்களின் நபர்களிடமிருந்து 100 மில்லியன் டாலர் திருடியதைத் தொடர்ந்துதான் இவர் பிரசித்திப் பெற்றார்.

No comments: