Nov 25, 2010

நவம்பர் 26 வரதட்சணை தடுப்பு தினம்: உறுதிமொழி எடுப்போம்.

நவம்பர் 26 என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் வரதட்சணை தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு அலுவலகம், பள்ளி, கல்லூரி என அனைத்து இடங்களிலும் வரதட்சணை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படவேண்டும், வரதட்சணை சட்டங்கள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவேண்டும் என்று தமிழக அரசு 2004ம் ஆண்டு ஆணை வெளியிட்டிருக்கிறது.

இதுவரை யாருக்காவது அதுபற்றி தெரியுமா? இதுவரை உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அது யாருடைய குற்றம்? உங்களது குற்றமா அல்லது மக்களிடையே இந்த சட்டங்களைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தாத அலுவலர்களின் குற்றமா? இவற்றைக் கண்டும் காணாததுபோல இருக்கும் அரசாங்கத்தின் குற்றமா? இந்த தினத்தில் இளஞ்சர்கள் ஒவ்வொர்வரும் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம்.

No comments: