
தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்க, தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளதை, அந்த அமைப்பு கண்டித்துள்ளது. கோவை மாவட்ட தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்., அமைப்பாளர் ஸ்ரீராமன் கூறுகையில், "சாலையில் 500 தொண்டர்களுடன் சீருடை அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டோம்; போலீசார் மறுத்துள்ளனர். சட்டப்படி அனுமதி பெற, சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளோம். கோவை நகரில் இதற்கு முன், தி.மு.க., - டி.ஒய்.எப்.ஐ., உள்ளிட்ட கட்சிகள், அமைப்பினரின் பேரணிகள் முக்கிய சாலைகளில் நடந்துள்ளன. இதனால், எங்களுக்கும் அனுமதி தர வேண்டுமென கோர்ட்டில் முறையிட்டு, முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்நிலையில், வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்; பல்வேறு இடங்களுக்கும் சென்று, பயிற்சியில் ஈடுபடக்கூடாது என தொண்டர்களை மிரட்டி வருகின்றனர்; இதை கண்டிக்கிறோம்" என்றார்.
No comments:
Post a Comment