Oct 21, 2010

கஷ்மீர் விசயத்தில் சுதந்திரம் ஒன்றுதான் தீர்வு :இன்று டெல்லியில் கருத்தரங்கம்.

புதுடெல்லி,அக்.21:கஷ்மீர் பிரச்சனைக்கு அம்மாநிலத்திற்கு சுதந்திரம் வழங்குவதுதான் தீர்வு என்பதுக் குறித்த கருத்தரங்கம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. கோப்பர் நிக்கஸ் மார்கில் இன்று மதியம் 2 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது. கமிட்டி ஃபார் ரிலீஸ் ஆஃப் பொலிடிக்கல் ப்ரிஸனர்ஸ் என்ற மனித உரிமை அமைப்புதான் இந்த கருத்தரங்கை நடத்துகிறது.

இக்கருத்தரங்கில் தெஹ்ரீ-இ-ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி, அருந்ததி ராய், புரட்சி கவிஞர் வரவரராவ், கமிட்டி ஃபார் ரிலீஸ் ஆஃப் பொலிட்டிக்கல் ப்ரிஸனர்ஸ் தலைவர் குருஷரண் சிங், ஓய்வுப்பெற்ற நீதிபதி எ.எஸ்.பய்ன்ஸ், சமூக ஆர்வலர்களான ஷவ்கத் ஹுஸைன், என்.வேணூஹ், தியாகு, அமீத் பட்டாச்சார்யா, மாலெம், நஜீப் முபாரகி, சுஜாதோ பத்ரா, சுதாபத்ர
சென்குப்தா, அபர்ணா, கன்வர்பால் சிங், எஸ்.ஏ.ஆர்.கிலானி ஆகியோர் உரை நிகழ்த்துவர்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: