Sep 4, 2010

பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் கலவரம் செய்ய சதித்திட்டம்..

புதுடெல்லி,செப்.4:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தின் உரிமைத் தொடர்பான 125 ஆண்டுகள் பழமையான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் வருகிற செப்.17 அன்று வழங்கவிருக்கிறது. இந்த தீர்ப்பை ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. இந்த தீர்ப்பை வழங்கவிடாமல் கலவரங்களை நடத்த ஆர்.எஸ்..எஸ். தீவிரவாத அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில் 35000 துணைராணுவப் படையினரை குவிக்க அரசு முடிவுசெய்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாப்பதற்காக துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி.அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

35000 துணைராணுவப் படையினரை(400 கம்பெனி) அனுப்ப உ.பி.அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரியிருக்கிறது.முன்னர் உ.பி.கவர்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு இவ்வளவு ராணுவத்தினர் தேவை என அறிவித்திருந்தார். இந்த கோரிக்கையை முதல்வர் மாயாவதி ஆதரித்துள்ளார்.அயோத்தியா, ஃபாஸியாபாத் ஆகியவை மட்டுமின்றி வாராணாசி, கான்பூர், லக்னோ, மாத்துரா, அலஹபாத், கோண்டா, அலிகர், மொராதாபாத், மீரட் உள்ளிட்ட நகரங்களில் ஹிந்து தீவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படவேண்டும் என மாநில அரசு கருதுகிறது.

1 comment:

அப்துல் பாஸித் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஒரு சிறிய தகவல்..

பாபர் மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு இன்ஷா அல்லாஹ் செப்டம்பர் 24 அன்று...