Jul 31, 2010

காஷ்மீரில் நிலைமை கட்டுக்கடங்காமல் போவது கவலை அளிப்பதாக உள்ளது:பான் கி மூன்.

ஜுலை31:காஷ்மீர் நிலைமை கவலை தருவதாக உள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 'காஷ்மீரில் கடந்த மாதம் நடந்த கலவரங்களில் 17 பேர் பலியான சம்பவம் கவலை தருவதாக உள்ளது.'கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நிலைமை கட்டுக்கடங்காமல் போவது கவலை அளிப்பதாக உள்ளதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரும் அமைதி காத்து, பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்' என்றார்.

No comments: