May 20, 2010
தமிழகத்தை தாக்கிய லைலா புயல் - ஆறுவர் பலி.
இந்திய தமிழகத்தை லைலா புயல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வங்காள விரிகுடாவில் உருவான லைலா புயல் காரணமாக தமிழகத்தின் கரையோர பிரதேசங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகளவு மழை பெய்து வந்தது.இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.தமிழகத்தில் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருவதாகவும் இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நாடி செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment