Mar 3, 2016

எது தேசம்? எது தேசத்துரோகம்?

ன்று இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளைக்காரனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த காவிக்கும்பல்தான் இன்று வெள்ளைக்காரனின் காலனியச் சட்டங்களைக் கொண்டு ஜே.என்.யூ மாணவர்கள் மீதும் ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்கள் மீதும் தேசத் துரோக வழக்குகளை வீசுகிறது.
இவர்களின் போலி தேசபக்தியை திரைகிழிக்கும் விதமாகவும் உயர்கல்வித்துறையை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பார்ப்பன பாசிச கும்பலை முறியடிக்கும் விதமாகவும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் மார்ச் 3-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அதில் ஜே.என்.யூவில் நடந்தது என்ன என்பதை மாணவர் பிரதிநிதிகள் விளக்கவிருக்கிறார்கள். இந்து மதவெறி பாசிசத்தை அம்பலப்படுத்தி தலைவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். காவி இருளை கிழிக்க ம.க.இ.க-வின் புரட்சிகர பாடகர் கோவன் பாடுகிறார்.

ஆர்ப்பாட்டம் : 03-03-2016 காலை 10 மணி வள்ளுவர் கோட்டம்.

தோழர் மருதையன்
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தோழர் ராஜூமாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
திரு சுப. வீரபாண்டியன்
தலைவர்
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை
பேராசிரியர் சிவக்குமார்
தோழர் கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பு.மா.இ.மு
தகவல்:  தோழர் ராஜா (சென்னைக் கிளைச் செயலர்)
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

No comments: