Feb 18, 2016

இந்துத்துவா பாசிசத்திற்கு எதிரான அணிவகுப்பு !

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் தாரக மந்திரம். இந்த மதச்சார்பற்ற கொள்கைக்கு RSS சங்பரிவார ஃபாசிச கும்பல் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. 

மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவின் மதசார்பின்மை, மற்றும் சகிப்புத்தன்மை கேள்வி குறியாகி உள்ளது. சகோதரத்துவத்துடன்  வாழ்ந்து வரும் இந்திய மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. 

இதை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிப்ரவரி 17 அன்று  பாப்புலர் ஃப்ரண்ட் தினம் என்று அறிவித்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற முழக்கத்துடன் இந்தியா முழுவதும்    கொடியேற்றி இரத்ததானம், இலவச மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு சமுக நலத்திட்ட உதவிகளை வழங்கியது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாசிச ஹிந்துதுவாவின் திட்டங்களை நாங்கள் உடைக்க வல்லவர்கள் என்பதனை உணர்த்த சீருடை அணிந்த வீரர்கள் ராணுவ அணிவகுப்பு பேன்ற அணிவகுப்பை நடத்தினர். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமை பேரணி என்ற அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
*மலர் விழி*

No comments: