Feb 7, 2014

காவி களின் காவாலித்தனம் !?

பழங்குடி இன பெண்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடத்தி சென்று கற்பழிக்கிறார்கள்; பழங்குடி இன தலைவர் பூரியா குற்றசாட்டு !

மத்திய பிரதேஷ் மாநில கிராம புறங்களில் பரவலாக ஆர்.எஸ்.எஸ் காரர்களால் பழங்குடி-ஆதிவாசி இன பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்படுகிறார்கள் என்று முன்னால் மத்திய அமைச்சரும் ஆதிவாசி இனத்தின் தலைவருமான காந்திலால் பூரியா குற்றம் சாட்டி இருக்கிறார்.

போபாலில் காங்கிரஸ்-ஆதிவாசி இன பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய காந்திலால் பூரியா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆதிவாசி கிராமங்களில் வீடு வீடாக செல்கிறார்கள் உணவும் மற்றும் சில வாக்குறுதிகளுடன் செல்லும் இவர்களின் இவ்வாறான வருகை என்பது பெண்களை லட்சியமாக கொண்டே அன்றி வேறில்லை என்று தெரிவித்த பூரியா, ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கிராமங்களுக்குள் நுழைய விடாதீர்கள் என்றும் ஆதிவாசி இன மக்களிடம் எச்சரிக்கை செய்தார்.

இவ்வாறான குற்றசெயல்களில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்ய காவல் துறையினர் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.ஆளும் பிஜேபி அரசு சங் பரிவார் குற்றவாளிகளை காப்பாற்றியும் அவர்களை பராமரித்தும் வருகிறது என்றும் பூரியா அவ் விழாவில் பேசினார். பூரியாவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திர பாபட் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்து இருக்கிறார்.

காவி பயங்கரவாதிகளின் 
காவாலித்தனத்தை நாடு காணட்டும்.

No comments: