Jan 8, 2013

இந்தியாவில் தொடரும் போலீஸ் ரவுடிகளின் அக்கிரமம்!

Jan 09: மகாராஷ்டிர மாநிலம்  "துலியா" நகரத்தில் கலவரத்தை அடக்குகிறோம் என்று போலீஸ் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் உள்ள துலியா என்ற நகரில் 06/01/2013  அன்று போலீசாரின் கண்  மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். குண்டடிபட்ட  நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

கொல்லப்பட்டவர்கள் விபரம்:  முட்டையை விற்பனைச் செய்வதற்காக வந்த அஸீம் ஷேக்(24), காய்கறி வாங்க வந்த இளைஞரான மார்க்க அறிஞர் ஆஸிஃப் அப்துல் ஹலீம்(வயது 30), 12-வது வகுப்பு பயிலும் ரிஸ்வான் ரஈஸ் பட்டேல்(வயது 17), எலக்ட்ரீசியன் இம்ரான் அலி கமருத்தீன்(வயது20) ஆகியோர் மரணமடைந்துள்ளனர். சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்ட இன்னொரு நபர் நேற்று முன் தினம் மரணமடைந்தார்.

கலவரத்துக்கான காரணம்: ஒரு பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர் நடத்தும் ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டு முடித்ததும் அதற்கான பணத்தை அவர்கள் கொடுக்கவில்லை. இதையடுத்து, அந்த 4 பேரையும் ஹோட்டல் ஊழியர்கள் தாக்கியுள்ளனர். அடிவாங்கியவர்கள் சிறிது நேரத்தில் பெரிய கும்பலுடன் வந்துள்ளனர்  இதனால் கலவரம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்திய போலீஸ் பயங்கரவாதம்:  தொடர்ச்சியாக 3மணி நேரம் நடத்தப்பட்ட கல்வீச்சில் காயங்கள் ஏற்பட்டதே தவிர யாதொரு உயிரழப்புகளும் ஏற்ப்படவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்துகிறோம் பேர்வழிகள் என்று சொல்லிக்கொண்டு களத்தில் இறங்கிய இந்திய சிறுபான்மை எதிர்ப்பு  போலீஸ், முஸ்லிம்களை குறிவைத்து சுட்டுக்கொன்றது. பின்னர் வழக்கம் முஸ்லிம் வீடுகளின் கதவுகளை உடைத்து முஸ்லிம்களை கைது செய்தது.

மும்பை போலீசாரின் காவி சிந்தனை: இரு பிரிவினர் இடையே நிகழ்ந்த மோதலில் போலீசார் மீது தாக்குதல் நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், போலீஸார் முஸ்லிம்களை மட்டுமே தேடிப் பிடித்து சுட்டுக் கொலைச் செய்துள்ளனர். கலவரம் நடந்த இடத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத மார்க்கெட்டில் பகுதியில் பல்வேறு தேவைகளுக்காக வந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
 
போலீஸாருக்கு பயந்து ஓடி தப்ப முயன்ற 12-ஆம் வகுப்பு பயிலும் ரிஸ்வான் ரஈஸ் பட்டேலின் முதுகில் இரண்டு தடவை போலீஸ் துப்பாக்கியில் இருந்து வெளியான தோட்டா துளைத்துள்ளது. மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு முட்டைகளை விற்பனைச் செய்ய வந்த அஸீம் ஷேக்கை போலீஸ் சுட்டு கொன்றுள்ளது.  காகலவரத்தை காரணமாக வைத்து காவி சிந்தனை படைத்த காவல்துறை முஸ்லிம்களை மட்டும் வேண்டும் என்றே சுட்டு கொன்றுள்ளது.
 
போலீஸ் என்றால் நீதி! நேர்மை! இல்லை ரவுடிசம்! பயங்கரவாதம்!

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

நம் நாடு எங்கோ போய் கொண்டிருக்கிறது!!!!

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)