Jan 13, 2013

தமிழக அரசின் பொன்னான திட்டம்! வாழ்த்துக்கள்!

Jan 13: சென்னை: ‌தொழிலாளர்கள் நலனுக்கான சென்னையில் மலிவு விலையில் உணவகங்கள் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை அதனைசுற்றியுள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்கள் பலன் பெறும் வகையில் 1000 உணவகங்கள் திறக்கப்படும். முதற்கட்டமாக ஒவ்வொரு வார்டுக்கும் 200 உணவகங்கள் திறக்கப்படும்.

இந்த உணவகங்களில் 1 ரூபாய்க்கு 1 இட்லியும்,  5 ரூபாய்க்கு 1 சாம்பார் சாதமும்,   3 ரூபாய்க்கு 1 தயிர்சாதமும் விற்கப்படும். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக மாதந்தோறும் ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கப்படும். 

சிந்திக்கவும்:  இந்த திட்டம் சிறந்த முறையில் நடைமுறைபடுத்தப்பட்டால் சென்னையை சேர்ந்த  பல ஆயிரக்கணக்கான ஏழை, எளிய உழைக்கும் மக்கள் பயன் பெறுவார்கள். இந்த சிறந்த திட்டத்தை தந்த தமிழக முதல்வருக்கு நமது வாழத்துக்கள்.

1 comment:

ANBUTHIL said...

வரவேர்க்கதகுந்த திட்டம் பகிர்தமைக்கு நன்றி நண்பா