Jan 31, 2012

இடிந்தகரை வீரமங்கைகளிடம் புறமுதுகிட்ட இந்து முன்னணி!

FEB 01: கூடங்குளம் அணு மின்நிலயம் தொடர்பாக 4வது காட்ட பேச்சு வார்த்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் என மத்திய நிபுணர் குழு அறிவித்திருந்தது. இதில் மத்திய நிபுணர் குழு சார்பாக  முத்துநாயகம் தலைமையில், 12 பேர் வந்திருந்தனர்.

அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவின் மக்கள் தலைவர் உதயகுமார் தலைமையில் கிராமத்து மக்கள் ஜீப், மற்றும் வேன்களில் வந்தனர். இவர்கள் வந்த வாகனங்கள் கலெக்டர் அலுவுலகத்தில் நுழையும் பொழுது அங்கே திட்டமிட்டு காத்திருந்த சுமார் 20 இந்து முன்னணியினர் கிராம மக்கள் வந்த வாகனங்கள் மீது கற்களை வீசி கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்க்கும் மக்களுக்கும் மத்திய நிபுணர் குழுவுக்கும் நடக்க இருந்த பேச்சு வார்த்தையில் இந்து முன்னணியினருக்கு என்ன வேலை. அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை காந்திய வழியில் நடத்தி உலகின் தலை சிறந்த மக்களாக கூடங்குளம் மக்கள் விளங்குகின்றனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

இப்படி அமைதி வழியில் போராடும் ஒரு மக்களை  வலுக்கட்டாயமாக  கலவர பாதைக்கு அழைத்து சொல்லும் ஒரு வேலையை இந்து முன்னணி செய்துள்ளது.  இந்து முன்னணி கலவரக்காரர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதும் அந்த மக்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். கூடங்குளம் பகுதியை சேர்ந்த வீரமான கிராமத்து பெண்கள் இந்து முன்னணி காடையர்களுக்கு பதில் அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.

இந்த பேச்சு வார்த்தையில் புகுந்து கலவரத்தை உண்டாக்குவதன் மூலம் கூடங்குளம் மக்களின் அமைதி போராட்டத்தை பற்றிய ஒரு தவறான கருத்துருவாக்கத்தை ஏற்ப்படுத்த இந்து முன்னணி மற்றும் தினமலர் நாளிதளின் கூட்டு சதியாகவே இதை பார்க்க முடிகிறது. 4வது கட்ட  பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்பட்ட நாள் முதல் கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடு தினமலர் செய்திகளை வெளியிட ஆரம்பித்தது. இந்து முன்னணிகாரர்களுடன் தினமலர் நிருபர்கள் கேமிரா சதவீதம் காத்திருந்தனர்.

முதலில் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியவர்கள் இந்து முன்னணி குண்டர்கள்தான். இருந்தாலும் தினமலர் அதையெல்லாம் படம் பிடிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் கைகளில் கற்களை தூக்கி வைத்து கொண்டிருக்கும் படத்தை செய்தியாக வெளியிட்டு தன் அரிப்பை தீர்த்து கொண்டது. அந்த பெண்கள் கன்னியாகுமரி இடிந்த கரையை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிட்டு. உதயகுமார் ஏன் இடிந்தகரை பெண்களை இந்த பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்தார் என்று கேட்டிருகிறது.

ஏன் இடிந்தகரை பெண்களை கூட்டி வந்தால் என்ன தவறு. அது மட்டுமல்லாது அணுவுலை எதிர்ப்பு மக்கள் தலைவர் உதயகுமார் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் இந்து முன்னணி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆயுத பயிற்சி எடுத்து திட்டமிட்டு கலவரம் செய்வது  இந்து முன்னணி இயக்கத்திற்கு வேண்டுமால் பழக்கமாக இருக்கலாம் அதற்காக  மக்கள் போராட்டங்களை குறித்து அவதூறு பரப்ப தினமலருக்கும், இந்து முன்னணிக்கும் என்ன  தகுதி இருக்கிறது. தமிழர்கள் அறிவார்கள் தினமலர் மற்றும் இந்து முன்னணியின் யோக்கிதை பற்றி.

இடிந்தகரை பெண்களை பார்த்து ஏன் தினமலரும், இந்து முன்னணியும் பயப்பட வேண்டும்.  உதயகுமார் நிறைய ஆண்களை கூட்டி வருவார் நாம் கலவரம் செய்து அவர்களை ஜெயிலில் தள்ளிவிட்டால் இந்த போராட்டத்தை வலுவிழக்க செய்யலாம் என்று எண்ணிய தினமலர், இந்து முன்னணியின்  சதி திட்டத்தை இடிந்தகரை மீனவ குலத்து வீர மங்கைகள் முறியடித்தனர். வழக்கம்போல் காலதாமதமாக வந்த போலீசார், இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பினர். பின், இந்து முன்னணியினர், 10 பேரை கைது செய்தனர்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதகுல விரோதிகளே.
*மலர்விழி*   

40 comments:

Anonymous said...

Very good article ...... Thank u ..... By Raja

தமிழ் மாறன் said...

Nalla pathivu vaalththukkal

இருதயம் said...

//கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதகுல விரோதிகளே.//

இந்த கருத்தை மிக வன்மையாக கண்டிக்கிறேன் .

ஆனந்த் said...

தினமலம் இப்படிதான் செய்யும் அவர்கள் இனம் அப்படி.

ஆனந்த் said...

//இந்த கருத்தை மிக வன்மையாக கண்டிக்கிறேன் .

தவறு என்றால் எப்படி என்று விளக்கவும்.

Anonymous said...

அனு மின் நிலையம் கூடாது என்று சொல்வது கிறுஸ்துவ நிறுவனங்கள் . பணம் கொடுப்பது கிருத்துவ நாடுகள்.

இதில் துலுக்கனுக்கு என்ன வேலை?

PUTHIYATHENRAL said...

வணக்கம் இருதயம் அவர்களே நீங்கள் உங்கள் இணையத்தில் கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரித்து எழுதி வருகிறீர்கள் ஆனால் ஒரு விஷயத்தை ஆதரிக்கும் போது அதற்க்கு தேவையான காரணங்களை முன்வைக்க வேண்டும். நான் உங்களுக்கு தோழர் முத்து கிறிஷ்ணனின் காணொளியை பார்க்கு மாறும் அதற்க்கு முடிந்தால் உங்களின் விளக்கத்தை தருமாறும் அன்போடு கேட்டு கொள்கிறேன். நீங்கள் ஆதரிப்பதால் கூடங்குளம் அணு மின்நிலையம் ஆபத்தானது இல்லை என்று பொருள்கொள்ள முடியாது. மத்திய நிபுணர் குழுவே அந்த மக்கள் அமைத்துள்ள நிபுணர் குழுக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

ஜனநாயக முறையில் போராடுவதைக்கூட இவர்கள் அனுமதிக்கவில்லை, இந்து முன்னணி போன்ற மதவெறி குழுக்களின் வெளிப்படையான தாக்குதலை வைத்து பார்க்கும்போது இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

சூசை பர்னாந்து - உவரி.

தமிழ் மாறன் said...

இந்து முன்னணி காலிகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்தைக் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாக பொய்ச்செய்தியிட்டு அதற்கு ரகளை என்றும் தலைப்பிட்டு மகிழ்கிறது பார்ப்பன தினமலர்.இந்த வந்தேறி பார்பன தினமலரை தமிழகத்தை விட்டு துரத்தும் நாள் நெருங்கி விட்டது. தமிழர்களே ஒன்றுபடுங்கள். இந்தியா என்றுமே தமிழர்களுக்கு அந்நிய நாடுதான் என்பதை அது ஈழத்து இன அழிப்பு, கூடங்குளம், முல்லை பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சனை, காவிரி பிரச்சனை என்று எல்லாவற்றிலும் நமக்கு உணர்த்தி விட்டது. தமிழர்கள் ஒன்றுபடுவதை இனி எந்த வடஇந்திய சக்திகளாலும் தடுக்க முடியாது.

தமிழ் மாறன் said...
This comment has been removed by the author.
தமிழ் மாறன் said...

//அனு மின் நிலையம் கூடாது என்று சொல்வது கிறுஸ்துவ நிறுவனங்கள். பணம் கொடுப்பது கிருத்துவ நாடுகள்.
இதில் துலுக்கனுக்கு என்ன வேலை?//

கொஞ்சமாவது மனிதாபிமானம் இருந்தால் இந்த அனானி இப்படி பேசுவாரா! எதிர்ப்பு என்பது கூடன்குளத்தில் மட்டுமல்ல. மகாராஷ்ரா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தை இதற்கு உதாரணமாக எடுத்து கொண்டால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது நிரூபணமாகி இருக்கிறது. இவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களா? இவர்களுக்கு எந்த கிறிஸ்தவ நாடு பொருளாதார உதவி செய்கிறது. அனானி உங்களுடைய மதவெறி உங்கள் கண்ணை மறைகிறது. நீங்கள் சார்ந்துள்ள பார்பன வர்ணாசிரம சித்தாந்தம் உங்களை மனிதாபிமானம் இல்லாம் கீழ்த்தரமாக பேச வைக்கிறது.

தமிழ் மாறன் said...

வணக்கம் நான் இந்தியன் இதயம் அண்ணா, நலமா இருக்கீங்களா. உங்களுக்கு சில கேள்விகளும் பதிலும் அதை படித்தால் நீங்கள் இந்த கூடங்குளம் அணு உலை ஆதரவு நிலையில் இருந்து மாறுவீர்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி 1. இந்த போராட்டம் எதிர்ப்பு ஏன் அணு உலைகளை தொடங்கிய நாட்களிலேயே இல்லை ?

பதில்: 1. இருப‌த்தைந்து காலமாக‌ இந்த‌ போராட்ட‌ம் தொட‌ர்ந்து கொண்டு தான் இருக்கிற‌து. ஆனால் அதை நாம் தான் அறிந்து கொள்ள‌வில்லை. கூட‌ன்குள‌ம் அணு உலை குறித்தான‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ப‌ல‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளி வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்திருக்கின்ற‌ன.அணு உலையை எதிர்த்து ப‌ல‌ ஊர்வ‌ல‌ங்க‌ளும் பொதுக்கூட்ட‌ங்க‌ளும் இடிந்த‌க‌ரையிலும் நெல்லை மாவ‌ட்ட‌த்தின் ப‌ல‌ ஊர்க‌ளிலும் ந‌ட‌ந்திருக்கிறது. ம‌க்க‌ள் ஆத‌ர‌வு வ‌லுப்பெறாத‌ கால‌ க‌ட்ட‌ங்க‌ளில், அறிவு சார் தள‌த்திலே இருந்த‌ இந்த‌ எதிர்ப்பு, ம‌க்க‌ள் எதிர்ப்பாக‌ உருப்பெற்ற‌வுட‌ன் அத‌னை கொச்சைப்ப‌டுத்த‌ தொட‌ங்கியிருக்கிற‌து இந்திய‌ அர‌சு.

தமிழ் மாறன் said...

வணக்கம் நான் இந்தியன் இதயம் அண்ணா, நலமா இருக்கீங்களா. உங்களுக்கு சில கேள்விகளும் பதிலும் அதை படித்தால் நீங்கள் இந்த கூடங்குளம் அணு உலை ஆதரவு நிலையில் இருந்து மாறுவீர்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி 2. கூடன்குளம் அணு உலை திறக்கப்படவில்லையென்றால் எப்படி நம் மின் தடை பிரச்சனை நிறைவேறப்போகிறது.காலம் முழுவதும் நாம் இருளில் மூழ்க வேண்டியது தானா ?


பதில்: 2. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 2.62% தான் அணு உலைகளின் பங்களிப்பாக இருக்கிறது. சூரிய ஒளியிலிருந்து 11%மும், அனல்,புனல்,காற்று இவைகளிலிருந்து 65% மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.

கூடன்குளம் அணு உலை 1200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது.இதில் கூட‌ன்குள‌ அணு உலைக்கே செல‌வாகும் மின்சார‌ம் 12%. ஆக‌ ந‌ம‌க்கு 1080 மெகாவாட் மின்சார‌ம் தான் உற்ப‌த்தி என‌ வைத்துக் கொள்வோம். இதில் ந‌ம் மாநில‌த்திற்கு 50% தான் என‌ அர‌சு நிர்ண‌யித்திருக்கிற‌து. வ‌ழ‌க்க‌மாக‌ 30% தான் சொந்த‌ மாநில‌த்திற்கு கிடைக்கும்.ஆக‌ த‌மிழ்நாட்டிற்கு 540 மெகாவாட் கிடைக்குமெனில், இதில் மின்க‌ட‌த்த‌லின் இழ‌ப்பு 15 முத‌ல் 20% வ‌ரை இருக்குமெனில் ந‌ம‌க்கு கிடைக்க‌ விருப்ப‌து வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் ம‌ட்டுமே.

சுப‌.உத‌ய‌குமாரின் கூற்றுப்ப‌டி, த‌மிழ்நாட்டில் உள்ள குண்டுப‌ல்புக‌ளை எல்லாம் மாற்றி குழ‌ல் விள‌க்குக‌ளாக‌ மாற்றினாலே நாம் 500 மெகாவாட் மின்சார‌ம் சேமிக்க‌ முடியும். வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கா இவ்வ‌ள‌வு கோடிக‌ள் ??? க‌ட்டுமான‌ செல‌வை விடுங்க‌ள்.உலை இய‌ங்க‌ ஆர‌ம்பித்தால் ப‌ராமரிப்பு செல‌வு என்ன‌ ஆகும் தெரியுமா ?

ஜெர்ம‌னி,சுவிட்ச‌ர்லாந்து, ஜ‌ப்பான் உள்ளிட்ட‌ ப‌ல‌ நாடுக‌ள் த‌த்த‌ம‌து அணு உலைக‌ளுக்கு மூடுவிழா நட‌த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா ம‌ட்டும் அணு உலைக‌ளை தொட‌ங்குவ‌து ஏன் ? அமெரிக்கா திணித்த 123 அணு ஒப்ப‌ந்த‌த்திற்கு அடிப‌ணிந்து என்றென்றும் யுரேனியம் விற்கும் நாடுக‌ளுக்கு இந்தியா அடிமையாக‌ இருப்ப‌த‌ற்கான‌ அடிமை சாச‌ன‌ம் தானே அது.

தமிழ் மாறன் said...

வணக்கம் நான் இந்தியன் இதயம் அண்ணா, நலமா இருக்கீங்களா. உங்களுக்கு சில கேள்விகளும் பதிலும் அதை படித்தால் நீங்கள் இந்த கூடங்குளம் அணு உலை ஆதரவு நிலையில் இருந்து மாறுவீர்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி 3. அப்துல்கலாமே சொல்லிட்டாரே. 100% பாதுகாப்பானது தான் என்று. அப்புறமென்ன போராட்டம் அது இதுன்னு தேவையில்லாத வேலை. அவருக்கு தெரியாததா உங்களுக்கெல்லாம் தெரியப் போகிறது. கார் விபத்தில் இறக்காதவர்களா ? கூடங்குளம் அணு மின்னிநிலய்த்தால் இறந்து விட போகிறார்கள்.

பதில்: 3.1986 செர்னோபிலின் அணு உலை ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையவை என கூகிளில் லேசாக ஒரு தேடலை தொடங்குங்கள். ரஷ்யாவில் உள்ள செர்னோபிலின் அதே அணு உலையைத் தான் பெயர் மாற்றி நமக்கு விற்றிருக்கிறார்கள். கூடன்குளமும் செர்னோபிலும் வடிவமைப்பில் ஒன்றே தான். இதிலும் முதன்முறையாக குளிர்விக்கும் கலன்களாக கடல்நீர் அமையவிருப்பது ரஷ்ய விஞ்ஞானிகளுக்கே புதியது. ரஷ்ய அணு உலைகளிலே 31 மிகப்பெரிய காரணிகள் ஆபத்தாக இருக்கின்றன என ரஷ்ய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் போது, ஊழல் மிகுந்த நம் நாட்டில் 100% பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயண சாமி, வாயிலே வடை சுடுகிறார்.

தமிழ் மாறன் said...

வணக்கம் நான் இந்தியன் இதயம் அண்ணா, நலமா இருக்கீங்களா. உங்களுக்கு சில கேள்விகளும் பதிலும் அதை படித்தால் நீங்கள் இந்த கூடங்குளம் அணு உலை ஆதரவு நிலையில் இருந்து மாறுவீர்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி 4. செர்னோபில்-லாம் ந‌ட‌ந்து 25 வ‌ருஷ‌ம் ஆவுதுங்க‌..இப்ப‌ இருக்க‌ இந்திய‌ விஞ்ஞானிக‌ள்லாம் இப்போ ரொம்ப திறமைசாலிங்க இதெல்லாம் யோசிக்காமலா இந்த ப்ரொஜெக்டை கொண்டு வருவார்கள்?

பதில்: 4.கூடன்குள அணு உலை விபத்து நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய பேராபத்துகள் ஒருபுறமிருக்க, அணு உலை ( விபத்தின்றி ) இயங்கினாலே ஏற்படக்கூடிய பிரச்சினைகள் இன்று அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியி இருக்கின்றன.கூடங்குளம் அமைப்பதில் மரபு விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அணு உலைப் பகுதியில் மக்கள் உயிர் வாழ உரிய உத்தரவாதம் இல்லை. விபத்து இல்லாமல் அணு உலைகள் இயங்கும்போது ஐயோடின் 131, 132, 133 ஐசோடோப்கள் வெளியிடும் ஸ்ட்ரோண்டியம், டிரைடியம், டெலுரியம் என்ற கதிர்வீச்சு வாயுக்களால் பல அழிவுகள் ஏற்படும். நிலத்தடி நீர், விவசாய விளைப்பொருட்கள், கடல்நீர், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயங்கள் ஏராளம்.மக்களின் உயிரோடும் வாழ்வாதாரங்களோடும் ஒப்பிடுகையில் நாட்டின் வளர்ச்சி என்பது இரண்டாம் பட்சம் தானே. அணு உலையால் ஏற்படும் கேடுகளால் உலகின் பல நாடுகளில் அணு உலைகள் மூடப்படும் நிலையில் நாம் மட்டும் அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும்.

தமிழ் மாறன் said...

வணக்கம் நான் இந்தியன் இதயம் அண்ணா, நலமா இருக்கீங்களா. உங்களுக்கு சில கேள்விகளும் பதிலும் அதை படித்தால் நீங்கள் இந்த கூடங்குளம் அணு உலை ஆதரவு நிலையில் இருந்து மாறுவீர்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: 5.இவ்வளவு செலவு செய்தாகி விட்டதே. இதை எப்படி கைவிடுவது?
பதில்:5.தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் கோலான் என்ற தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் சில நோய்களால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. இதில் பழமையானது தாராப்பூர் (மகாராஷ்டிரா). இந்த அணு உலைகளைச்சுற்றி பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் உருக்குலைந்து தான் பிறக்கின்றன. பலர் புற்று நோயால் இறக்கின்றனர்.ஆனால் எல்லா உண்மைகளையும் இந்திய அரசும் அணுசக்திக்கழகமும் ரகசிய காப்பின் கீழ் வெகுசிரத்தையுடன் மூடி மறைத்து வருகிறது. அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. ஆஸ்திரியா, ஸ்வீடன், பின்லாந்து, யுகோஸ்லாவாக்கியா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய பல நாடுகளும் பாதகமான இந்த அணுஉலைகளை வேண்டாம் என்று தவிர்த்து வருகின்றது.கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தில் அங்கிருந்த ஃபூகுஷிமா டைச்சி அணுஉலை கடலில் மூழ்கி அங்கு நடந்த கோர சம்பவத்தை நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம்.

இன்று கூடன்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் தூத்துக்குடி தொடங்கி பழையகாயல், புன்னக்காயல், காயல்பட்டினம், கொம்புத்துறை, ஆலந்தலை, குலசேகரன் பட்டினம், மணப்பாடு, பெரிய தாழை, உவரி, கூடுதாளை, கூட்டப்பனை, கூடங்குளம், கூத்தங்குளி, கருத்தழை, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி என்று குமரி வரை நீண்ட அமைதியான கடற்கரை கிராமங்கள் யாவும் இன்று அணு உலைகளுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை குரல். இத்தனை எழில்மிகும் கடல்கரை நகரங்களையும் அந்த மக்களின் வாழ்வாதாரங்களையும் நசுக்க முடியாது.

Anonymous said...

கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது தேசத்துரோக சட்டங்கள் பாயும், பாயப்போகிறது என்று பீதியூட்டி வருகிறது தினமலம் நாளிதழ். அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் உளறல்களை மிகப்பெரும் விளம்பரத்தோடு பரப்புரை செய்தது வருகிறதே. அதே சமயம் உதயகுமாரின் செல்பேசி எண்ணை வெளியிட்டு அனைவரும் அவரை செல்பேசியில் அழைத்து மிரட்டுங்கள் என்று தனது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வெறியர்களுக்கு மறைமுகமாக சமிக்கை செய்கிறது தினமலர். கூடன் குளம் பிரச்சனை என்பது மக்கள் பிரச்சனை இதை திசை திருப்ப கோமாளி மன்மோகன் மற்றும் சோனியாவும், ஹிந்துத்துவா கூட்டங்களும் அதன் ஒப்பாரி நாளிதழ்கள் ஆன தினமலர் மற்றும் சோ வகைறாக்கள் சதி செய்கிறார்கள்.

//////மண்ணின் மைந்தன்.

Anonymous said...

இன்று அணு உலை எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு தந்து ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம், தஞ்சை தமிழ் பல்லைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தொ.பரமசிவன், பா.ம.க. கொள்கை விளக்க அணி செயலாளர் வியனரசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் காசி விஸ்வநாதன், லெனினிஸ்ட் கட்சி ரமேஷ், பகுஜன் சமாஜ் தேவேந்திரன், ஆதி தமிழர் பேரவை கலைகண்ணன், வக்கீல் தங்கசாமி, தமிழ்புலிகள் மாயா, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்மணிமாவீரன், மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம் முகமது பாரூக், தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் பிரிட்டோ, மக்கள் கண்காணிப்பகம் கணேசன் ஆகியோர் நெல்லை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கமிஷனர் கருணாசாகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

Anonymous said...

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கிறோம். கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ள அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

போராட்ட குழுவினர்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தாக்குதல் நடத்திய இந்து முன்னணி, காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி, இந்து தேசிய காங்கிரஸ் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

unmai said...

சொடுக்கி கேளுங்க‌ள்

>>>> அன்றே திரு குரானில் கூறப்பட்டிருக்கும் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள். !!! இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் குரானில் 1400 வருடங்களுக்கு முன்பே அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது. <<<<<<

Mohamed Osman said...

ANBULLA ANAIVARUKKUM.

INTHA ANU ULAI THEN MAVATTA MAKKALUKKU ORU PERUM SOTHANAI, SABAKKEDU. VIPATTHU ERPATTAL MATURAIKKU THERKKA ETHUM IRUKKATHU. JAPAN PATTA PATTAI PARTTHU GERMANY NIRANTHARAMAHA URRI MUDI VITTATHU INTHA ANU ULAIHALAI.

INKULLA SILARHAL CHRISTIAN ENRAL AMERICA OR EUROPE PANAM MUSLIM ENRAL ARBU NATTU PANAM ENRU BALA VARUDANKALAHAVA KATHAI SOLLI MEDAIA VIL PIRACHARAM SEITHU VARUHIRARHAL. IVARHAL NOKKAM MINORITY MAKKALAI TORTURE PANNUVATHU THAN.

THEN MAVATTATHIL JATHI KALAVARAM & MATHA RITHIYANA TENSION ATIHAM. ATHARRKKU THEVAIYANA THOLIL SALAIHAL ETHUVUM KIDAIYATHU. MINSARAM THIRUPUR & GOVAI IKKU THEVAI. ANU ULAI THEN MAVATTHUKKU.
ITHU THAN IVARHLAIN NEETHI.

PATHTRIKAIHAL SAITHIYAI VELIYUDALAM. ANAL SILA VARMMPU MEERI SEITHALIL AVARHAL KARUTTHAI SORUHUVATHU MEDIA VANMURAI. ATHARKKU SILA THEEVEERA RIGHT GROUPKAL SUPPORT UNDU.

SILAR ITTHANAI VARUDAM EAN ETHIRPPU THERIVIKKAVILLAI ENRU ATHI METHAVI THANAMAHA KELVI KOTKIRHAL.

THEEMAIYAEN VEERIYATTAI JAPANIL PARRTHA ANAITHU NADUKALUMA TIHAITTU VITTANA. ANKULLA KARRU, NEER ANAITHUM RADIATION KARANAMAH MASU PATTU NASA MAHI VITTATHU. VIVASAYAP PAYIRHAL, VEGETABLES, FRUITS ANAITHIULUM RADIATION.

MINSARAM THEVAI THAN. ATARKAHA KANNAI VIRRU SITTHIRAM VANKA MUDIYUMA ?

ETIRPAVARKALAI VIMARSIPPATHU ONRU, ATHU OK. AVARHALI PULUTHI VARI THURRI AVAMANAPADUTTHUVATHU POL NADAPPATHU THEEVIRA VATHIKALIN KUNAM - ITHAI AVARKAL PURINTHU KOLLA VENDUM

ANBUDAN

M. OSMAN

தமிழ் மாறன் said...

Thank u mr. Osman

தமிழ் மாறன் said...

Kannai vetru sithiram vangamudiuma I love this word ...... Very good comments ...... I like thank u osman

இருதயம் said...

@ தமிழ்மாறன் : நண்பருக்கு வணக்கம் ...

தங்களின் அணைத்து கேள்விகளுக்கும் எனது வலைப்பூவில் தனி தனி இடுகைகள் இடப்பட்டுள்ளது . தயை கூர்ந்து படியுங்கள் . நன்றி

தமிழ் மாறன் said...

Ok I. Will go and rea and I wii give u replay ... Thank u tho

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைத்து நன் மக்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக .... கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதகுல விரோதிகளே...,,மிகவும் அருமையான கருத்து வாழ்த்துக்கள்...,,, வீரத்தாய்மார்களிடம் உதை வாங்கிய மனிதகுல விரோதிகள் இந்த RSS ஹிந்துத்துவாவினர் இவர்களை அனைத்து நன்மக்களும் இணைந்து [மாறு கால் மாறு கை] வாங்கனும் அப்பதான் திருந்துவார்கள் .......ஜனநாயகத்தைநம்புவோர்களிடம் ஜனநாயக வழியில் போராடுவோம்...,,, பினநாயகத்தை நம்புபவர்களிடம் பினநாயகவழியில் போராட்டத்தை முன்னேடுப்போம் தமிழினமே ஒன்றுபடு RSS தீவிரவாதிகளை அழித்திடு....,,,,BY ..புனிதப்போராளி

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைத்து நன் மக்கள் அனைவர்களின் மீதும் உண்டாவட்டுமாக ....[[[.அனு மின் நிலையம் கூடாது என்று சொல்வது கிறுஸ்துவ நிறுவனங்கள் . பணம் கொடுப்பது கிருத்துவ நாடுகள்.
இதில் துலுக்கனுக்கு என்ன வேலை?...]]]] ஏண்டா RSS பார்ப்பன முட்டாள்களா கூடங்குளம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா...துலுக்கன் என்றால் உனக்கு ஏண்டா தொடை நடுங்குகிறது... உன்னை அறிந்து வைத்திருப்பவன் துலுக்கன் மட்டும்தான் என்பதினாலா இந்தியாவில் தமிழகத்தில் பிறந்த யாருக்கும் அணுமின் நிலையத்தை எதிர்க்க உரிமைவுள்ளது இதை உன் வகையறாக்களால் ஒன்றும் புடுங்க முடியாது பொத்திக்கிட்டு போங்கடா .... BY .. புனிதப்போராளி

கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதகுல விரோதிகளே.// said...

சரியாக சொன்னீர்கள் ...

Anonymous said...

கூடங்குளம் அணுஉலையை மூடுவதால் சுமார் 13500 கோடி ரூபாய்கள் மக்களின் வரிப்பணம் வீணாகிவிடும் என்று அரசு தரப்பும், அரசுத் தரப்பின் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். கூடங்குளம் போன்றே மக்கள் எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவிலும் சில அணுமின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக அதே மின்உலையில் வேறு எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் புத்திசாலித்தனமான முடிவை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. by: RAJA

Anonymous said...

அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க் அருகே உள்ள ஷோர்ஹாம் என்ற இடத்தில் லாங் ஐலேண்ட் லைட்டிங் கம்பெனி (லில்கோ) சார்பில் 1973 முதல் 1984 ஆண்டுக்குள் அணு உலை ஒன்று கட்டப்பட்டது. 1979ம் ஆண்டு மூன்று மைல் அணுஉலையில் ஏற்பட்ட விபத்து மற்றும் 1986ம் ஆண்டு ஏற்பட்ட செர்னோபில் விபத்து காரணமாக எச்சரிக்கை அடைந்த அமெரிக்க மக்கள் ஷோர்ஹாமில் அமையவிருந்த அணுஉலைக்கு எதிராக தொடர்ச்சியாக போராடினர்.

Anonymous said...

ஷோர்ஹாமில் நிறுவப்பட்டிருந்த அணுஉலை உபகரணங்கள் வேறு அணுஉலைகளுக்கு அனுப்பப்பட்டன. 2002, ஆகஸ்ட் மாதத்தில் அதே இடத்தில் இயற்கை வாயுவால் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் காற்றாலைகளும் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.

Anonymous said...

திட்டமிடுவதும், கலவரம் நடத்துவதும் பாசிசவாதிகளுக்கு புதிதா?

Anonymous said...

Very good article. Thank u for sharing


Azad - nellai

தமிழ்மது said...

ஒரு பெண்ணை எட்டி உதைத்த அந்த ஈனப்பிறவியின் காலை வெட்டி எடுக்கவேண்டும்

Anonymous said...

1. கூடங்குளம் அணுஉலைக்கு தொழில்நுட்பம் தந்த ரஷ்யாவே 17% தான் அணு சக்தியை பயன்படுத்தி மின்சாரம் பயன்படுத்துகிறது.

2. உலக நாட்டாமை அமெரிக்கா 20% தான் பயன்படுத்துகிறது.

இப்படி அணுசக்தியில் வல்லமை படைத்த நாடுகள் எல்லாம் அணு சக்தியை குறைவாக பயன்படுத்தும் போது, அணு சக்தியில் அடுத்த நாட்டிடம் கையேந்தும் நமக்கு ஏன் இந்த உலை?

அணு உலையினால் வரும் கழிவுகள் மிகவும் ஆபாத்தானவை என்று எல்லாருக்கு தெரியும், அப்புறம் ஏன் அணு உலை உடையாது என்று சொல்கிறார்கள்.

அணு உலை உடையாது என்றால் ஏன் அமெரிக்கா அதிகமான அணு சக்தியை பயன்படுத்தவில்லை? ஆதலால் எந்த விதத்திலும் அணு உலை ஆபாத்தானது.

Anonymous said...

தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்கள்:

1. நெய்வேலி நிலக்கரி மின் உற்பத்தி நிலையம்
2. கல்பாக்கம் அணு மின் நிலையம்
3. முல்லை பெரியாறு அணை, நீர் மின் நிலையம்
4. எண்ணூர் Thermal பிளான்ட்
5. மேட்டூர் நீர் மின் நிலையம்
6. Narimanam Natural Gas Plants
7. Muppandal wind farm

இன்னும் பல சிறிய நீர் மின் நிலையங்கள் இருக்கிறது. இவ்வளவு மின் உற்பத்தி நிலையங்கள் இருந்தும் ஏன் நம் மின்சார தேவையை பூர்த்திசெய்ய முடியவில்லை?

இன்னும் ஒரு உற்பத்தி நிலையம் கொண்டுவந்தால் நம் தேவை பூர்த்தியாகி விடுமா? ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுத்தது போக நமக்கு கிடைக்கிறது.கரநாடகவுக்கு மின்சாரம் தேவை என்றால் அங்கு அணு மின் நிலையத்தை நிறுவ வேண்டியது தானே? தமிழ்நாட்டில் ஏன்?

Anonymous said...

தேசத்து விவசாயிகள் வறுமையில் சாவது தொடர்கிறது. ஏழ்மை, அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமை என்று மக்கள் தவிக்கும் பொழுது அதை பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் மன்மோகன் சிங் கார்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி ஆகிப்போனார்.

Anonymous said...

The Religious fundamentalists failed to understand the genuine protest of the common people. It is really a sad story in Tamil nadu. We could only pray for them.

Anonymous said...

The Religious fundamentalists failed to understand the genuine protest of the common people. It is really a sad story in Tamil nadu. We could only pray for them.

Anonymous said...

nice article