Oct 31, 2011

RSS இயக்கத்தின் சூலாயுதமும்! விஜய்யின் வேலாயுதமும்!

NOV 01: கடந்த சிலவருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்த, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க உன்னைப்போல் ஒருவன், வேலாயுதம் போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருகின்றன.

இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது. தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முயன்று வந்தன. பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்தும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹிந்துத்துவா இயக்கத்தை ஒரு மாநிலத்தில் வேரூன்ற செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு இஸ்லாமிய எதிப்புணர்வு என்கிற சக்தி தேவைபடுகிறது. அந்த சிந்தனையை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் தமிழ் சினிமாவை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை  தமிழகத்தில் பரப்பவும் அதேநேரம் முஸ்லிம் எதிர்ப்பு வெறி உணர்வை ஏற்படுத்தவும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதிதான் ஜிஹாத் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி எல்லாம்.

இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமே என்பது நிரூபனமான பின்னரும் அதை பற்றி எந்த சினிமாவும் வாய்திறக்க வில்லை. இப்படி இருக்க இஸ்லாமிய எதிர்புணர்வை  ஏற்படுத்தும் இதுபோன்ற
படங்களை எடுத்து  ஹிந்துக்கள் உள்ளத்தில் முஸ்லிம்களை பற்றிய HATE POLICY (வெறுப்புணர்வு) உண்டாக்கி இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை தமிழகத்தில் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ். யின் செயல்திட்டமே இது.

ஈழத்திலே தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், தமிழகத்திலே தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள், இதை பற்றி காட்ட எந்த சினிமாவுக்கும் துப்பில்லை. நமது ஹிரோக்களுக்கும்,  தயாரிப் பாளர்களுக்கும் பயங்கரவாதி ராஜபக்சேவிடம் இருந்து தமிழர்களை காப்பது போல் படம் எடுக்க முடியவில்லை. சமகாலத்தில் நடந்த ஒரு கோரத்தை பற்றி சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு கலவரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை போவதேன்?

இது போன்ற படங்களை எடுக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பின்னணியில் இருந்து பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது என்றே நம்பத்தோன்றுகிறது. அத்வானியின் தமிழக வருகையும் விஜய்யின் வேலாயுதம் படம் வெளியீடும் ஒரு கலவரத்துக்கான ஒத்திகையாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

18 comments:

Anonymous said...

இந்தியாவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சூலாயுதத்தை கண்டு பயப்படுகிறது இந்த சினிமா துறை மட்டும் ஈன விதிவிலக்கா?

Anonymous said...

இந்த கயவாலிகளின் ஒரே குறிக்கோள் பணம் பண்ணுவது. நான் கடவுள் என்ற படத்தில் எந்த வகையில்
மனிதம் கொல்லப்படுவதை தத்ரூபமாக காட்டுகிறார்களோ, அதற்க்கு கொஞ்சமும் குறையாத வகையில்
இருக்கும் மனித மிருகங்கள்தான் விஜய், விஜய்யின் அப்பா, போன்ற நடிகர்கள்.

இவர்களுக்கு, இவர்களால் ஒட்டப்படும் இரத்தம் பெரிதல்ல. அந்த இரத்தத்தில் விளையும் பணமே பிரதானம். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. செல்வி? ஜெயலலிதாவின் ஆசியுடன் இவர்களின் தர்பார் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்று பார்க்கலாம்?

தலித் மைந்தன்

Anonymous said...

இந்தியாவின் எல்லா துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவிவிட்டது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஹிந்துராஜியம் அமையும். ஜெய் ஹிந்த்.

UNMAIKAL said...

CLICK THE LINK AND READ

கீழே சொடுக்கி படியுங்கள்.

>>>> உண்மை சம்பவம். முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன்!!! ஏன்? ஏன்? <<<<

.

Unknown said...

True .........Super post! Keep it up!

rajamelaiyur said...

//இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது.
//
படத்தை படமாக பாருங்கள் .. r s s க்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் ? இது என் தாழ்மையான கருத்து . தவறு எனில் மன்னிக்கவும்

M.Mani said...

இந்தியா முழுக்க குண்டு வைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். நல்ல ஜோக். முஸ்லிம்கள் மும்பை, கோவையில் மலர்ச்செண்டு வைத்தார்களா? கசாப் மும்பை ரயில் நிலையத்தில் அப்பாவி மக்களுக்கு சூடாக தேநீர் கொடுத்தானா?

Anonymous said...

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல்திட்டங்களை விளக்கும் அருமையான பதிவு. இப்படித்தான் அண்ணன் தம்பிகளாக
மாமன் மச்சான்களாக உறவு சொல்லி பழகி வந்த ஹிந்து முஸ்லிம்கள் மத்தியில் வெறுப்பையும் பிரிவினையையும்
ஏற்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ். நோக்கம் என்பதை தெளிவிபடுத்தும் பதிவு. வாழ்த்துக்கள் நண்பா!

நட்புடன் - தமிழ்மாறன்.

Anonymous said...

மணி சார்! தொடர் கொண்டுவேடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். பெண்சாமியார் முதல் சுவாமி அஸிமானந்தா வரை இருப்பதும் அவர்கள் இப்போது ஜெயிலில் இருப்பதும் உங்களுக்கு தெரியாதா? ஜோக்காம் இல்ல ஜோக்!


குண்டு வெடிப்பிற்கு முன்பு நடந்த சதித்திட்டத்திற்கு தலைமை வகித்தது, அஜ்மீர் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு நிதியுதவி அளித்தது RSS யின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார்தான் என்பதற்கான ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்திருப்பதன் அடிப்படையில் அவரை கைதுச்செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குண்டு வெடிப்பு சதித்திட்டம் தீட்டப்பட்ட ரகசிய கூட்டத்தில் பெண் பெண்சாமியார் பிரக்யாசிங் தாக்கூரும் பங்கேற்றுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான சுவாமி அஸிமானந்தா அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாவார். இவர் அளித்துள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில், இந்திரேஷ்குமார்தான் குண்டுவெடிப்புகளுக்கு தேவையான நிதியுதவியை அளித்ததாக மற்றொரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில்ஜோஷி தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் குண்டு வெடிப்புகளில் இந்திரேஷ்குமாரின் பங்கினைக்குறித்த ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்தன. பல்வேறு குண்டுவெடிப்புகளில் குற்றவாளியான சுனில்ஜோஷியை ரகசியம் கசிந்துவிடும் என்ற பயத்தில் ஆர்.எஸ்.எஸ் கொலைச்செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன மணிசார் இந்த பத்திரிகை செய்திகள் எல்லாம் மறந்து விட்டதா?

by: முஸ்தபா

Anonymous said...

///இந்தியா முழுக்க குண்டு வைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். நல்ல ஜோக்.//

மணி சார்! தொடர் கொண்டு வேடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். பெண்சாமியார் முதல் சுவாமி அஸிமானந்தா வரை இருப்பதும் அவர்கள் இப்போது ஜெயிலில் இருப்பதும் உங்களுக்கு தெரியாதா? ஜோக்காம் இல்ல ஜோக்!

குண்டு வெடிப்பிற்கு முன்பு நடந்த சதித்திட்டத்திற்கு தலைமை வகித்தது, அஜ்மீர் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு நிதியுதவி அளித்தது RSS யின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார்தான் என்பதற்கான ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்திருப்பதன் அடிப்படையில் அவரை கைதுச்செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குண்டு வெடிப்பு சதித்திட்டம் தீட்டப்பட்ட ரகசிய கூட்டத்தில் பெண் பெண்சாமியார் பிரக்யாசிங் தாக்கூரும் பங்கேற்றுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களில் ஒருவரான சுவாமி அஸிமானந்தா அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாவார். இவர் அளித்துள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில், இந்திரேஷ்குமார்தான் குண்டுவெடிப்புகளுக்கு தேவையான நிதியுதவியை அளித்ததாக மற்றொரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில்ஜோஷி தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் குண்டு வெடிப்புகளில் இந்திரேஷ்குமாரின் பங்கினைக்குறித்த ஆதாரங்கள் என்.ஐ.ஏவுக்கு கிடைத்தன. பல்வேறு குண்டுவெடிப்புகளில் குற்றவாளியான சுனில்ஜோஷியை ரகசியம் கசிந்துவிடும் என்ற பயத்தில் ஆர்.எஸ்.எஸ் கொலைச்செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன மணிசார் இந்த பத்திரிகை செய்திகள் எல்லாம் மறந்து விட்டதா?

BY: MUSTHAFA.

Anonymous said...

நான் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். காரன் என்கிற அடிப்படையில் சொல்கிறேன் அவர்கள் எப்படி சிறுபான்மை மக்களை பற்றி நான் சிறுவயதாக இருக்கும்போது என்மனதில் நஞ்சை விதைத்து அதன் காரணமாக நான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தேன்.

அதுமட்டும் அல்லாமல் நான் தமிழ் நாட்டில் இருந்து அயோத்திக்கு பாபர் மசூதி இடிக்க போனேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் உத்திரபிரதேசம், மற்றும் ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் நடந்த கடும் பயிற்சி பாசறைகளிலும் கலந்துள்ளேன்.

பிற்காலத்தில் ம.க.இ.க. தோழர்களின் நட்பு கிடைத்து இதுவெல்லாம் தவறு என்று உணர்ந்து திருந்தினேன். அவர்கள் அந்த பயிர்ச்சி பாசறையில் எனக்கு உடல் ரீதியான பயிற்சி, மனரீதியான பயிற்சி என்று நிறையகொடுத்து என்னை சிறுபான்மை மக்களுக்கு எதிராக திருப்பினார்கள். இதுவே உண்மை. உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பற்றி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி வணக்கம்.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியன் குமார்.

PUTHIYATHENRAL said...

//படத்தை படமாக பாருங்கள் .. r s s க்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் ? இது என் தாழ்மையான கருத்து . தவறு எனில் மன்னிக்கவும்//

"என் ராஜபாட்டை"- ராஜா ஐயா அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. கருத்து சுதந்திரம் என்பது வெகு முக்கியமான ஒன்று. தாராளமாக உங்கள் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் அதுவே ஒரு ஆரோக்கியமானதும் கூட.

சினிமா என்பது ஒரு பெரிய வெகு ஜன ஊடகம். இது மக்களுக்கு செய்திகளை சொல்லும்போது உண்மைகளை திரித்து ஒரு சிறுபான்மை இனத்திற்கு எதிராக நஞ்சை விதைப்பதாக இருக்க கூடாது என்பதே நமது கருத்து.
இது சினிமா தானே என்று சும்மா சொல்லிவிட முடியாது இது அப்பாவி மக்கள் உள்ளங்களில் ஒரு தவறான எண்ணத்தை விதைக்க உதவும். அதே நேரம் ஏன் ஒரு படம் கூட ஆர்.எஸ்.எஸ். மற்றும் காவிகளின் அநியாயங்களை பற்றி சொல்வதாக அமையவில்லை. என்பதே நமது கேள்வி.

முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இல்லை. அவர்கள் எல்லோரும் நம் உறவுகளே சில பல வருடங்களுக்கு முன்னாள் மதம் மாறியவர்களே. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை என்பது இன்றியமையாதது அதை குலைக்கும் விதமாக எடுக்கப்படும் இது போன்ற படங்கள் ஆர்.எஸ்.எஸ்.யின் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுக்கு என்ற சித்தாந்தத்துக்கு துணை போவதே அல்லாமல் வேறில்லை என்பதே நாம் சொல்லி இருப்பது.

Anonymous said...

///இந்தியா முழுக்க குண்டு வைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். நல்ல ஜோக். முஸ்லிம்கள் மும்பை, கோவையில் மலர்ச்செண்டு வைத்தார்களா? கசாப் மும்பை ரயில் நிலையத்தில் அப்பாவி மக்களுக்கு சூடாக தேநீர் கொடுத்தானா//

திருவாளர் மணி அவர்கள் கவனத்திற்கு:

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925 யில் தொடங்கப்பட்டது. இதன் துணை அமைப்புகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. ஹிந்து இயக்கங்களின் ஊற்று கண் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லலாம். இந்த இயக்கம் தொடங்கப்பட்டது முதல் இந்தியா முழுவதும் நடத்திய கலவரங்கள் பல்லாயிரக் கணக்கில் அடங்கும். அதில் குறிப்பிட்டு சிலவற்றை சொல்லலாம்.

அவை, பாகல் பூர், பீவாண்டி, குஜராத், மும்பை, நெல்லி, ஒரிசா, ரத யாத்திரை என்கிற ரத்த யாத்திரை இவைகளை கலவரங்கள் என்ற பெயரில் சேர்க்க முடியாது இவை ஒரு இன அழிப்பு என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதில் பல்லாயிரக்கணக்கில் சிறுபான்மை மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். இதை நிகழ்த்தியவர்கள் இதுவரை சட்டத்தின் பிடியில் தண்டிக்கப்படாததும், அவர்கள் சார்ந்த இயக்கங்கள் தண்டிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.

......செங்கொடி......

Unknown said...

இந்தப் பதிவின் நோக்கமும் முஸ்லிம்களை சூடுபடுத்த வேண்டும் என்பதே!இது ஒரு தூண்டு பிரச்சாரப் பதிவு! ஆர்.எஸ்.ஏஸ் ஐ, 98சத இந்துக்கள் ஆதரிப்பதில்லை!

சீக்கியர்கள் தங்கள் மதத் தீவிரவாதிகளை கட்டுப்படுத்தியதைபோல் அனைத்து மதத்தினரும் செய்யவேண்டும்!

முட்டாள்தனமாக சீவி விட்டுக் கொண்டே இருந்தால் இழப்புகள் அனைவருக்குமே!

இந்தியத்தாய்மகன் said...

முஸ்லிம்களை கொல்லும் கொலைகார கும்பல்தான் [ rss ] கைபர் கனவாய் வழியாக வந்த பார்ப்பன பன்றிகள் எங்களையும் எங்கள் சகோதரர்களையும் தாழ்த்தபட்டவர்களாக மாற்றி விட்டார்கள் இந்த கயவர்களை இந்திய மண்ணில் விட்டு வைக்காதிர்கள் இவர்கள் இந்தியாவை ரத்த பூமியாக மாற்றி விடுவார்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தங்களை கத்துக்கொள்ள நீங்களும் திட்டம் தீட்டுங்கள் கொட்ட கொட்ட குனிபவன் முட்டாள் திருப்பி கொட்ட முனையுங்கள் அப்பதான் நிங்கள் இந்திய தாய் வயற்றில் பிறந்தவர்கள் தமிழா நம் தாய் வயற்றில் பிறந்த நம் சகோதரன் [முஸ்லிம்களுக்கு ] உறுதுணையாக இருப்போம் இந்து முஸ்லிம் ஒற்றுமையாக இந்தியாவை வல்லரசாக உயர்த்துவோம் by ... இந்தியத்தாய்மகன்

Anonymous said...

DEAR MR. VENKATAPATHI,

IT IS NICE TO SHARE WITH YOUR. THIS IS NOT THE FIRST FILM TAKEN AGAINST MUSLIM COMMUNITY. THERE WERE LOT MORE. THIS IS ONE AMONG THOSE VENOMOUS DEEP ROOTED MEDIA SLANDERS.

WHEN MANIRATHNAM TRIED TO SCREEN HIS BOMBAY FILM IN BOMBAY (NOW MUMBAI), PAL THAKAREY DID NOT PERMIT HIM BECAUSE ACCORDING TO THE FILM THE HERO READY TO COVERT HIMSELF TO ISLAM.

BUT, WHEN MANI RATHNAM EXPLAINED HIS STAND THAT A MUSLIM GIRL RUNNING OUT OF HER HOME AND HER COMMUNITY OUT OF LUST AND WHICH WILL AFFECT THE MUSLIM COMMUNITY IN WHOLE AND INJECTING THE VENOM TO YOUNG MINDS WOULD DO MUCH MORE THAN WEAPONS OF HINDU ACTIVISTS, HE PAL THAKKARE ACCEPTED TO SCREEN BOMBAY FILM ALL OVER MAHARASHTRA.

THE SAME MANIRATHNAM HAS TAKEN A FILM IN THE NAME OF 'ROJA'

VIJAYAKANTH, ARJUN HAVE ACTED LIKE A REAL KILLER OF MUSLIMS.

WE CAN NOT CONSIDER THESE ALL AS A SCRUPULOUS DIRECTORS AND ACTORS. THEY ARE ALL PART AND PARCEL OF A EVIL GANG.

DALITH MAINDAN

VANJOOR said...

ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவை..

“Saffron brigade's dark secret exposed”

“அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள்."


Click the links and see videos

1.
உண்மையான பயங்கரவாதிகள். ஒரு பார்வை. Video.


2.
அம்பலமாகும் காவிப்ப‌டையின் இருட்டு ர‌க‌சிய‌ங்க‌ள். "இந்தியா டுடே"


3.
தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? விடியோ. உரை. கேள்வி-பதில்.



4.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

Anonymous said...

என்னையா இந்த ஆர்.எஸ்.எஸ். காரங்களோட பெரிய அக்க போரா இருக்கு இவனுங்களை விட்டு விட்டு நம் தமிழர் பிரச்சனைகளை பற்றி பேசுவோம்.