Jul 13, 2011

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு!

JULY 14, மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது.

இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டு வெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில், 4 பேர் பலியானதாகவும், 100 பேர் காயமடைந் துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மும்பை முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலால் மும்பையில் பதட்டம் நிலவுகிறது. மும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. மும்பை குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகிய இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிந்திக்கவும்: இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தை தொடங்கியதும் இதை விரும்பாத ஹிந்துத்துவா சக்திகள் ஏதாவது சதி செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று எழுதி இருந்தோம். அது போலே நடந்துள்ளது ஒவ்வொரு முறை இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடக்கும் போதும் இதை விரும்பாத வெளிநாட்டு சக்திகளும், ஹிந்துதுவாவும் கைகோர்த்து செயல்படுவது வழக்கமே.

No comments: