Jul 29, 2011

அரசியல் கோமாளிகளால் அல்லல்படும் மாணவர்கள்!

JULY 29, சென்னை: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரி, தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் பிசுபிசுத்தது. இந்தப் போராட்டத்துக்கு, பொதுமக்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும் வகையில் ஆதரவு எதுவும் இல்லை.

சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.தி.மு.க., தலைவர் கருணாநிதி, சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வலியுறுத்தி, போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, சமச்சீர் கல்விக்கு ஆதரவாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும் என தி.மு.க., தலைமை கேட்டுக்கொண்டது.

மாணவர்களை தூண்டுவதாக தி.மு.க.,வின் செயலுக்கு, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி சங்க நிர்வாகிகளின் கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்துதாஸ் கண்டனம் தெரிவித்தார். பள்ளிகள் சுமுகமாக இயங்க யாரும் இடையூறு செய்யக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். "போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் சிங்காரவேலும் அறிவித்திருந்தார். . சைதாப் பேட்டையில் உள்ள தனியார் பள்ளி முன் திரண்ட போராட்டக்காரர்கள், மாணவர்களை வகுப்பறை களிலிருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர்.

சிந்திக்கவும்: இந்த ஒரு நாள் புறக்கணிப்பால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. மாணவர்களின் படிப்பில் அரசியலை நுழைக்கக் கூடாது. சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதே நேரம் பள்ளிகளை புறக்கணிக்கும் திமுகாவின் போராட்டத்தை யாரும் ஆதரிக்க முடியாது. சமச்சீர் கல்வி என்கிற ஒரு நல்ல திட்டத்தின் பாட நூல்களில் கருணாநிதி என்ற ஊழல் பெரிச்சாளி தன் புகழையும், தன் மகள் கனிமொழி மற்றும் குடும்பத்தார்கள் புகழ்பரப்ப நிறைய விசயங்களை நுளைத்ததினால் உண்டான குழப்பமே இது.

கருணாநிதி குடும்பம் என்ன சுதந்திர போராட்ட வீரர்களா? விஞ்சான ரீதியாக ஊழல் செய்த கைந்தேடுத்த அயோக்கியரின் குடும்ப வரலாற்றை தமிழக மக்கள் படிக்க வேண்டும் என்பது ஒன்றும் தேவையில்லை. இது ஜெவுக்கும் பொருந்தும். அதே நேரம் ஜெயலலிதா இந்த பாடத்திட்டத்தை இந்த வருடம் அனுமதித்து விட்டு பின்வரும் காலங்களில் அதில் மாறுதல் செய்திருக்கலாம். இவர்களது சாக்கடை அரசியல் புத்தியினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொறுப்பில்லா அரசியல்வாதிகளை, வரும் காலங்களில் மக்கள் ஒதுக்கி தள்ளிவிட்டு ஒரு புதிய அரசியல் மாற்றத்தை இளஞசர்கள் உண்டாக்க வேண்டும் என்பதே நமது ஆவல்.

2 comments:

VENIKARTHIKA said...

anathukkatchiyinar munbaha ovvoru palliyilum manavarkalidam minnanu vakkupathivu nadathi athanbadi mudiveduppathu admk arasukku ethrkalathukku nallathu!

Anonymous said...

சரியா சொன்னீங்க. நம் இஸ்லாமிய பாடத்திட்டத்தை கொண்டு வந்து தற்கொலைப்படையாக செல்வது எப்படி, வெடிகுண்டு செய்வது எப்படி, காபிர்களை கொல்வது எப்படி போன்ற பாடத்திட்டங்களை கொண்டுவந்து தமிழ்நாட்டு கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்

தமுமுக, தவ்ஹீத் ஜமாத் ஆகியோர் அந்த பணியில் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்