Apr 23, 2011

கேரளா ஒற்றப்பாலம்!! சங்கபரிவார் ஏற்படுத்திய கலவரம்!!

APRIL 24, கேரளா ஒற்றப்பாலம்: RSS சங்க்பரிவார் கேரள மாநிலம் ஒற்றப்பாலத்தில் நடத்திய வன்முறை வெறியாட்டம் தொடர்பாக நான்கு RSS சங்க்பரிவார்களை போலீஸ் கைது செய்துள்ளது.

போராட்டம் நடத்தும் வேளையில் ஆட்டோவை அடித்து உடைத்த சம்பவத்தில் வேணுகோபால்(வயது 42), சங்கரன் குட்டி( வயது 35), மாக்குண்ணி, ஜெயன்(வயது 44) ஆகிய RSS பயங்கரவாதிகளை போலீஸ் கைது செய்துள்ளது.

ஒற்றப்பாலம் பகுதியில் இரண்டு நாட்களாக தொடர்ந்த தாக்குதல் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முழு அடைப்பைத் தொடர்ந்து மக்கள் வாழ்க்கை மாமூல் நிலைக்கு திரும்பியுள்ளது. நேற்று அசம்பாவிதங்கள் ஒன்றும் நடக்கவில்லை.

கடந்த புதன்கிழமை ஒற்றப்பாலம் எஸ்.டி.பி.ஐ மண்டல தலைவர் மரைக்காயர் பைக்கில் செல்லும் பொழுது RSS சங்க்பரிவார பயங்கரவாதிகள் அவரை வெட்டிக் கொலை செய்ய முற்ப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உருவான அசம்பாவித சம்பவங்கள் பிரச்சனைக்கு காரணமாகின.

எஸ்.ஐ வேலாயுதன் தலைமையிலான இருநூறு போலீசார் ஒற்றப்பாலத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை நடந்த பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார அமைப்புகள் நடத்திய முழு அடைப்பில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த வன்முறைக்கு வழிவகுத்த போலீசாருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மரைக்காயரை கொல்ல முயன்றவர்களை இதுவரை கைது செய்ய முடியாதது போலீசாரின் கையாலாகதனம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments: