Jan 29, 2011

இதுதான் தமிழில் வஞ்ச புகழ்ச்சி அணி என்பதோ??

கருணாநிதிக்கு பல்வேறு தலைப்புகளில் பாராட்டு விழா நடத்தியாகி விட்டது. சமீப காலமாக பாராட்டு விழா நடத்தி நீண்ட நாட்கள் வேறு ஆகிவிட்டன. அதனால் என்ன செய்யலா மென்று, தி.மு.கவினர் யோசித்த போது அவர்களுக்கு வந்த திடீர் யோசனைதான், “ஊழல் மன்னன்“ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கலாம் என்ற யோசனை. இதையொட்டி, நடைபெற்ற விழாவில் ஒவ்வொருவரும் கலந்து கொண்டு பேசியது.

கலைஞானி கமலஹாசன்: நான் பல மேடைகளிலே சொல்லியிருக்கிறேன். சொல்லிக் கொண்டும் இருக்கிறேன். சொல்லிக் கொண்டே இருப்பேன். செல்வி ஜெயலலிதா முதல்வராகும் வரை. நான் கலைஞரின் சினிமாவைப் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டவன். அந்த சினிமாவிலே நான் கண்டதே, என்றோ ஒரு நாள் இந்த வசனத்தை எழுதியவர், இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழலைப் புரியப் போகிறார் என்று.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: கலைஞர்ஜீ ஊழல் மன்னனான்னு என்னேக் கேட்டா…அவர் ஊழலோட சூப்பர் ஸ்டார்னு சொல்லுவேன். இல்லேன்னாக்கா… சூப்பர் ஸ்டாரோட ஊழலப் பத்தி அவர் சொல்லுவார்….. ஹாஹ்ஹா. நான் தெய்வமா வழிபட்ற பாபாஜியப் பாக்க இமயமலேக்கு போயிருந்தேன். அப்போதான் தெரிஞ்சது, கலைஞர்ஜி மூணு மலைய வாங்கிருக்கார்ன்னு…. இமயமலேல்ல இருக்கற மூணு மலைய வாங்கிருக்காரே… நீங்க எப்படி பாபாஜி இருக்கறீங்கன்னு கேட்டதுக்கு, பாபாஜி, ராசாத்தி அம்மாஜிக்கு மாசா மாசம் வாடகை தர்றார்னு சொன்னதும் அசந்து போய்ட்டேன், நம்ம கலைஞர்ஜி டேலண்டப் பாத்து. சிம்பிளா சொல்லனும்னா… ஊழல் பண்றதுல, கலைஞர்ஜி சிட்டி ரோபோ மாதிரி.. ஜெயலலிதாஜி கூட ஊழல் பண்ணாங்க… ஆனா அவங்க பண்ண ஊழல் 66 கோடி… கலைஞர்ஜியோட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலே கம்பேர் பண்ணாக்கா…. அது ஜுஜுபி. நான் சினிமால ஒரு டயலாக் பேசுனேன். நான் ஒரு தட கலைஞர்ஜி ஒரு கோடி அடிச்சாக்கா.. ஒரு லட்சத்து …. எழுபத்தாறாயிரம் கோடி அடிச்சா மாதிரி….


நீரா ராடியா: ஹாய் கனி…. ஹாய் ராஜா…. ஹாய் கருணாநிதி…. ஹாய் ராசாத்தி… வேர் ஈஸ் ரத்னம் யார்…. கருணாநிதி நெவர் ஸ்போக் டு மீ ஓவர் போன் யார். ஒய் கருணாநிதி ஈஸ் நாட் டாக்கிங் ?. ஒன் மினிட் யார். (போனில் பேசுகிறார்)ஹாய் மன்மோகன்…. ஹவ் ஆர் யு… ஹவ் ஈஸ் சோனியா…. வெரி நைஸ் யார்… யா… யா… யு ஆர் ரைட் மன்மோகன். தேர் ஈஸ் ஒன் ஃபெலோ கால்ட், ஜாபர் சேட்…. யு ஆர் ரைட்.. ஹி டேப்ஸ் ஆல் தி போன் கால்ஸ் யார்.. இன்க்லுடிங் மை ஃப்ரெண்ட் ராஜாத்தி யார். யா கருணாநிதி ஈஸ் ஸ்டில் இன் வீல் சேர் யார். பட் ஹி ஈஸ் வெரி ஹெல்தி. யு நோ வாட் மன்மோகன்.யு வோன்ட் பிலிவ் திஸ். ஐ யம் தி ஹீரோயின் இன் ஹிஸ் நெக்ஸ்ட் மூவி. ட்ரூலி யார். வாட்..? யா யா. ஐ வில் ஆஸ்க் ஹிம் டு கிவ் யூ ய ஃபாதர் ரோல். ஓகே மன்மோகன் சி யூ இன் டெல்லி யார்
(மீண்டும் மேடையில் பேசுகிறார்.) கருணாநிதி ஈஸ் தி நம்பர் ஒன் கரப்ட் பொலிடீஷியன். தேர் ஈஸ் நோ டவுட் யார். டெல்லி போலிடீஷியன்ஸ் ஆர் யங். பட் திஸ் ஓல்ட் மேன் இன் ய வீல் சேர் ஈஸ் அமேஸிங் யார். ஓகே.. பை எவ்ரிபடி


வைரமுத்து: அன்று சர்க்காரியா சொன்னார். நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று. ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய். வானில் உள்ள தேவர்களின் எண்ணிக்கை கூட முப்பத்து முக்கோடி தான். நீ ஒரே தவணையில் அடித்ததோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி. ஊழல் செய்வதில் நீ ஒரு எட்டமுடியாத சிகரம்.
ஊழலுக்கே உன் குடும்பம்தான் தலைநகரம். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைவன் நீ..உன் குடும்பம் வழி வந்தாரை வாழ வைக்கும் தலைவன் நீ… ஆம் குடும்பத் தலைவன் நீ.. நான் கட்டியதோ பொன்மணி மாளிகை…. நீ கட்டியதோ பத்மாவதி, தயாளு மற்றும் ராசாத்தி… சர்காரியாவையே சாக்கு மூட்டையில் கட்டியவன் நீ…. உன்னிடம் சுண்டைக்காய் சிபிஐ எம்மாத்திரம்.

கவிஞர் வாலி:
கொற்றவனே… கொற்றவனே….
ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே…
தறுதலைகளை பெற்றவனே…
சூடு சொரணை அற்றவனே…
கொற்றவனே.. கொற்றவனே..

உன்னால் அடைய வேண்டியது ஏற்றம்.
தமிழகத்துக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.
மக்களுக்கு மிஞ்சியதோ முற்றம்.
உனக்கு அள்ளித் தந்தது ஸ்பெக்ட்ரம்.

தமிழ்ல உனக்கு புடிச்ச வார்தை கோடி
நீ பெத்து வச்சுருக்க புள்ளைங்களோ கேடி
தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..
உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி

எக்கச்சக்கமா சேத்துருக்க துட்டு
நீ கதை வசனம் எழுதுனா சூப்பர் ஹிட்டு
உன்னால தமிழகம் போனது கெட்டு
உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு.

ஏற்புரை கருணாநிதி: என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே….எனக்குப் புகழ்ச்சி அறவே பிடிக்காது. இவ்வாறு வந்து கூட்டங்களிலே அமர்ந்திருக்கும் நேரத்திலே கூட ஏதாவது கோப்புகளை பார்த்தால் சில கோடிகள் கிடைக்கும் என்று சிந்திப்பவன் நான். ஆனால் தம்பி வைரமுத்துவும், கலைஞானி கமலஹாசனும், விழாவிலே பங்கெடுப்பதற்காக 50 லட்சம் ரூபாய் தருவதாக சொன்னதால், எனது பணிகளுக்கு சிறிதே ஓய்வு கொடுத்து விட்டு இந்த விழாவிலே பங்கெடுக்க வந்துள்ளேன்.

இந்தியாவிலேயே சிறந்த ஊழல் மன்னன் என்று திட்டமிட்டெல்லாம் நான் என்றுமே பணியாற்றியது கிடையாது. ஒரு மனைவி, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள், வைத்திருப்பவர்கள் சில கோடிகள் ஊழல் செய்யலாம். ஆனால் என் குடும்பத்தையும் என் வாரிசுகளையும் பாருங்கள்… அவ்வளவு பேரையும் திருப்தி படுத்த வேண்டுமென்றால், ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து விட்டு, இடையறாது உழைத்தால்தானே முடியும் ? இந்த வயதிலும் நான் தொடர்ந்து உழைக்க ஒரே காரணம், இன்றும் என் குடும்பத்தினருக்கு போதுமான அளவுக்கு சொத்து சேர்க்காததே…..இன்னும் கொஞ்சம் சொத்துக்கள் சேர்த்து, டாடா, ரிலையன்ஸ், பிர்லா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டால், அதற்குப் பிறகு நான் அரசியலில் இருந்து விலகி, இலக்கியப் பணியிலே ஈடுபடலாம் என்று நினைக்கிறேன்.

ஆசிரியர் சிந்தனை : ஆக ஈழ தமிழர்கள் படுகொலைக்கு உற்ற நண்பனாக இருந்து நீலி கண்ணீர் வடித்த கருணாநிதிக்கு இப்படி ஒரு பாராட்டு விழா தேவைதான். ஈழ மக்கள் கொல்லப்படும் போது அதற்காக வேண்டி குறைந்த பட்சம் ஆட்சியையாவது துறந்திருக்கலாம். அப்படி அவர் துறந்திருந்தால் நாம் அவருக்கு வேறுவிதமான பாராட்டு விழா நடத்தி இருக்கலாம். நிரந்தர தமிழர் தலைவராக அவரை வரலாறு பார்த்திருக்கும். என்ன செய்ய அவர் அடித்த கொள்ளைகளை மறைக்க அல்லவா! முயற்சி செய்துவிட்டார். ஈழ தமிழர்கள் படுகொலைகள் நடக்கும் போது இவர் நடத்திய எத்தனை சிறப்பான நாடகம், எத்தகையதோர் சிறந்த நடிப்பு இவர் உண்மையில் பல் கலைஞர்தான் வரலாறு இவரை மன்னிக்காது.

No comments: