
மத்திய அரசின் உத்தரவையடுத்து, கர்நாடகாவில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, போலீஸ் அதிகாரிகள், அரசு உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருல் நடந்தது. ஆலோசனைக்கு பின், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைத் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்துவா தீவிரவாத உள்ளிட்ட அமைப்புகள், மாநிலத்தில் நாசவேலைகளில் ஈடுபடக் கூடும் என்று மத்திய உளவுத் துறை தகவல் கொடுத்துள்ளது. இதன் பின்னணியில், மாநிலம் முழுவதும் பயங்கரவாதிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், "ஹை அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. 550 பேர் அடங்கிய ராணுவப் படையினர், நகரில் முகாமிட்டுள்ளனர். எந்த சூழ்நிலையிலும் தேவையான நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளனர். மாநிலத்தின் நிலைமை முழு அளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது; போலீஸ் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment