
நம்முடைய நாட்டை பொறுத்தவரையில் 40 மில்லியன் மக்கள் மொபைல் போன் மூலம் இன்டெர்நெட்டை பார்ப்பதாகவும்,வரும் 2012-ம் ஆண்டிற்குள் மொபைல் இன்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களை லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பார்க்கவைக்க முயற்சி செய்துவருவதாகவும்,கடந்த 2007-ல் 2 மில்லியன் மக்கள் இன்டெர்நெட்டை பார்த்துவந்தனர். இது தற்போது 20 மடங்காக அதிகரித்துள்ளது. இன்நெட்டை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஆன்லைன் ஷாப்பிங் டில்லி முதலிடம்: ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதில் டில்லி முதலிடம் வகிக்கிறது. மும்பை நகரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஆன்லைனில் பெரும்பாலும் பெல்ட், பக்கிள்ஸ்,வாட்ச்சுகள்,போன்றவற்றையே வாங்குகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் ஆன்லைன் வர்த்தகம் பெரும்பாலும் புதுடில்லி, மும்பை, ஜெய்ப்பூர், சென்னை, பெங்களூரூ ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெற்றுவருகிறது. பெரும்பாலான இளைஞர்கள்,இளைஞிகள் மேற்கத்திய இசை அடங்கிய சிடிக்களையே ஆன்லைனில் பெறுகின்றனர்.
மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் உள்ள ஐ.டி.,துறை களை சேர்ந்தவர்களே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். தற்போது இந்தியாவின் புறநகர் பகுதிமக்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட துவங்கி விட்டனர்.
1 comment:
THE YOUS FULL IN ONLINE NETWORK
Post a Comment