
இதனையடுத்து முதன்மைக் குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகின்றன என்று நீதிபதி தட்சிணாமூர்த்தி கூறியுள்ளார்.அதே நேரம் எம்.டி.எம்.ஏ பிரிவு தொடர்ந்து புலனாய்வு செய்து அவ்வப்போது தனது அறிக்கைகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும் எனவும் நீதிபதி கூறியிருக்கிறார்.
அண்மைக் காலம் வரை பிரபாகரன் மரணம் குறித்து அதிகார பூர்வமாக கருத்தெதுவும் தெரிவிக்காத இந்திய அரசு இப்போது பிரபாகரன், மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மரணமடைந்து விட்டதால் அவர்கள் மீதான வழக்கு முடித்துக் கொள்ளப்படலாம் என்று அறிவிக்க வேண்டிய அவசியமென்ன என்று பலரும் வியக்கிறார்கள்.
No comments:
Post a Comment