சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பிரித்தானிய கப்பல் விடுவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் கப்பலிலிருந்த பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சோமாலிய கடற் கொள்ளையர்கள் கோரிய கப்பம் செலுத்தப்பட்டுள்ளதை அடுத்தே குறித்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட கப்பலில் 26 மாலுமிகள் இருந்துள்ளதோடு கடற் கொள்ளையர்கள் கோரிய கப்பம் சோமாலியாவின் ஜேம்ஸ் பார்க் துறைமுகத்தில் வைத்து நேற்று வழங்கப்பட்டது.
குறித்த கப்பல் ஸ்பெயினிலிருந்து தாய்வான் நோக்கி சென்று கொண்டிருந்த போது கடந்த டிசம்பர் மாதம் ஏடன் வளைகுடா பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கடத்தப்பட்ட கப்பலில் இருந்த மாலுமிகள் ரஷ்யா உக்ரேன் பல்கேரியா ரோமானியா போலந்து ஜோர்ஜியா இந்தியா துருக்கி மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாட்டவர்கள் பயணித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment