Feb 8, 2010

சீக்கியர்கள் உடைவாள் அணிந்திருக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி கூறுகிறர்.


சீக்கியர்கள் மதரீதியாக அணியும் கிர்பான் எனும் உடைவாளை பிரிட்டனில் வாழும் சீக்கியர்கள் பள்ளிக்கூடங்களுக்கும், இதர பொது இடங்களுக்கும் அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என, பிரிட்டனின் முதலாவது சீக்கிய நீதிபதியான சர் மோட்டா சிங் கேட்டுள்ளார்.

பள்ளிக்கூடங்களில் அதை தடை செய்வது தவறு என்று அவர் குறிப்பாக பள்ளிகள் மீது கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீக்கிய மத சிறுவர்கள், தீட்சை பெற்ற சீக்கியர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஐந்து கோட்பாடுகளில் கிர்பான் அணிவதும் ஒன்று. பிரிட்டனில் உடைவாள் அணிந்த சீக்கியர்கள் பொது இடங்களுக்கு நுழைவது தடைசெய்யப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன

No comments: