Apr 30, 2015

விண்வெளி பற்றி ஒரு துளி!

பால்வெளி (galaxy) யில் மனிதர்கள் வாழும் பூமி சூரிய குடும்பத்தை சேர்ந்ததாகும். ஆரம்ப காலத்தில் விண்வெளி ஆராட்சியாளர்களால் சூரிய குடும்பம் ஒன்றே பால்வெளி மண்டலத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.  

பின்னர், சூரிய குடும்பம் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான கோள்களின் குடும்பங்கள் இருப்பதாக ஆராட்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மிக தொலைவில் உள்ள அவைகளை சென்றடைய முடியுமா? என்கிற ஆராய்ச்சி தொடர்கிறது. ஆரம்ப காலத்தில் புளூடோ என்கிற கோள் சூரிய குடும்பத்தை சேர்ந்ததாக கணக்கிடப்பட்டது. அதனாலேயே நவகிரகங்கள் என்று சொல்வார்கள். பின்னர் அது பெரும் கோள் அல்ல என்று கருதப்பட்டு சிறு கோள்களுடன் சேர்க்கப்பட்டது. 
சூரியக் குடும்பம் (Solar System);  சூரியகுடும்பம் என்பது சூரியனையும்  சூரியனின் ஈர்ப்பு விசையில் சுற்றும் கோள்கள், சிறுகோள்கள், துணை கோள்கள் போன்றவற்றை  உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். புதன் வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரோனஸ், நெப்டியூன் ஆகிய எட்டு கோள்கள் சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள்கள் ஆகும்.

சிறுகோள்கள் அல்லது குறுங்கோள்கள்:  செரசு, புளூடோ, எரிஸ், ஹௌமியா, மேக் மேக், செட்னா ஆகியவைகள் ஆகும். 

துணைக் கோள்:  நீலா ஆகும்.

போற்றப்படும் அறிவியல் அறிஞ்சர்கள்;   நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கலீலியோ கலிலியோகான்னசு கெப்லர்,  ஐசக் நியூட்டன்,  ஆகியோர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆவர். 

கருங்காலி மரமும் அதன் மருத்துவ குணமும் !

கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகள் மிகவும் உறுதியானது. இப்பலகை கருப்பு நிறம் கொண்டது. நூற்றாண்டுகள் கடந்தாலும் சேதம் அடையாதது. இதன் ஆங்கில பெயர் "EBONY" ஆகும்.

இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய இந்த மரத்தின் பலகைகள் மூலம் செய்யப்படும் பொம்மைகள், அலங்கார பொருட்கள், கதவு, ஜன்னல், மர அலமாரிகள், கட்டில் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை தங்கத்துக்கு இணையான பெறுமதி மிக்கவை.


மருத்துவ குணம் : கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும்.  பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.. இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  பித்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் அதேவேளை  கிருமி நாசினியாகவும் செயல்படும்.


கருங்காலி மரப்பட்டை

கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும்.  சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.  உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும்.

பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  மலட்டுத் தன்மையைப் போக்கும்.  பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.  நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதைஅருந்துவது நல்லது. வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும்.

இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் ஓர் எடை எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

கருங்காலி மரப்பிசின்

கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து  காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால்  உடல் பலமடையும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

கரப்பான் நோயினை போக்கவல்லது.  பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.