Mar 18, 2012

சிங்கள பயங்கரவாததிற்கு ஆதரவு அளித்த RSS இயக்கம்!

March 19: ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் இந்தியா ஒரு முழுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று  ""RSS இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியாவின் பூகோள ரீதியான நன்மையை  கணக்கில் கொண்டு, உறுதியான நிலைப்பாட்டை  எடுக்க வேண்டும். மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன் இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசின் விஷயத்தில், அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கை அரசுக்கு எதிராக, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை கூறும் போது, அவர்களுக்கு எதிராக சண்டையிட்ட விடுதலைப் புலிகளை அமைதியானவர்கள் என்றோ, ஆயுதமற்றவர்கள் என்றோ கூற முடியாது. நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், டாங்குகள் என, முழுமையான படைக்கலம் அவர்களிடம் இருந்தது.

சிந்திக்கவும்:  காந்தி படுகொலை, தொடர் குண்டு வெடிப்பு, மதக்கலவரங்கள்  என்று இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வந்த ஒரு இயக்கம்தான் RSS இயக்கம். ஒரு பயங்கரவாததிற்கு இன்னொரு பயங்கரவாதத்தால் தான் துணை போக முடியும் என்பதை இதன் மூலம் RSS நிரூபித்துள்ளது.

RSS இயக்கத்தின் அடிவருடிகளான  சுப்பிரமணிய சுவாமி, மற்றும் பார்பன கூட்டங்கள் ஈழத்து இன அழிவுக்கு எதிராக ராஜீவ் காந்தி கொலையை காரணமாக சொல்லி அதை திசை திருப்ப முயன்றனர். வசதியாக ராஜீவ் அமைதிப்படை என்கிற கொலைகார படை மூலம் நடத்திய அக்கிரமங்களை மறைத்தனர்.

ஈழத்திலே அமைதி ஏற்படுத்துகிறோம்  என்று சொல்லி அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை  கொன்று குவித்து, பெண்களை கற்பழித்து மானபங்கப்படுத்தி கொடூரங்களை நிகழ்த்திய ஒரு கேவலமான படையை அனுப்பி பிரதமர் என்கிற ஒரு உயர்பதவியை பயன்படுத்தி பயங்கரவாத செயல்புரிந்தார் ராஜிவ்காந்தி.

மேற்கத்திய நாடுகள் முழுமையான ஒரு கவலையுடன் இந்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை என்று  கூறுவது  குஜராத் இனப்படுகொலை, காஷ்மீரில் ராணுவ பயங்கரவாதம், சத்திஸ்கரில் பழங்குடி மக்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை போன்றவற்றை நடத்திய ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்தியா நிகழ்த்திய பயங்கரவாதங்கள் வெளிஉலகிற்கு வந்துவிடுமோ என்கிற அச்சம்.

இலங்கையில் நடந்த போர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தை தொடர்ந்து இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களும், ராணுவ, மனித உரிமை மீறல்களும் உலக அரங்கில் கொண்டு செல்லப்படும். ஏற்கனவே மோடிக்கு அமெரிக்காவுக்கு போவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு பெயர்களில் இயக்கங்கள் நடத்தி நிதிவசூல் செய்து வருகிறது RSS இயக்கம்.  உலக அரங்கில் RSS ஒரு  பயங்கரவாத இயக்கம் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டால் அதன் நிதிவருவாய் நின்றுபோகும் என்கிற பயம்.

ஹிந்துக்களை, ஹிந்து கோவில்களை பாதுகாக்கிறோம், ராமருக்கு கோவில் கட்ட போகிறோம் என்று சொல்லி மசூதியை இடித்த சூரப்புலிகள் இப்போது யாழ்பாணத்தில் இருக்கும் கோவில்களை இடித்து அதில் புத்த விகார் காட்டுகிறான் சிங்கள வெறியன். அதை குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவர்களின் பரிவாரங்களான இந்து முன்னணி, பஜ்ரங்தள், சிவசேனை, இந்து மக்கள் கட்சி என்று ஒருத்தனும் வாய்திறக்க வில்லை.

ஈழத்திலே கொல்லப்பட்டது ஹிந்துக்கள் இல்லையா?  ஈழத்து ஹிந்துக்களால் தங்களுக்கு ஒரு  லாபமும் இல்லை அதுதான் இந்த மவுனத்திற்கு காரணம். இது இந்தியாவை ஆட்சி செய்ய பிராமணர்கள் போட்ட ஹிந்து முகமூடி. ஆனால் கஷ்மீர் இந்துக்களை பற்றி மட்டும் ரொம்ப கவலைப்படுவார்கள் ஏன் என்றால் அது  உயர் ஜாதி பண்டிட்டுகள் ஆட்சே. ஜாதிகொடுமையால் கொல்லப்படும் தலித் மக்கள் குறித்து பேசமாட்டார்கள். அதுகுறித்து கேட்டால்? ஜாதி ஏற்றத்தாழ்வு வேண்டும்! ஆனால் ஜாதி கொடுமை கூடாது என்று விநோதமாக பதிலளிப்பர்.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதுகுறித்து நீதி விசாரணை தேவை என்பதை மனித நேயம் கொண்ட யாராலும் மறுக்க முடியாது.  போரில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் அங்கே மீறப்பட்டுள்ளது. இதை சானல் 4  வீடியோ ஆவணம் தெளிவாக விளக்குகிறது. தீர்மானத்தை யார் கொண்டுவருகிறார்கள் என்பது இங்கே முக்கியம் அல்ல அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையே மனித நேயம் கொண்ட ஒவ்வொருவரின் கருத்தாகும்.
                                                                     *மலர்விழி*                         

16 comments:

  1. ஆர்.எஸ்.எஸ். என்பது பார்பனர்களின் கோட்டை.... வர்ணாசிரமத்தின் ஊற்றுக்கண்.

    ReplyDelete
  2. என்ன மலர்விழி அக்கா உங்களுக்கு டோட்டல் அம்னிசியாவா? அல்லது சேலேட்டேட் அம்னிசியாவா? அவாள் அப்படித்தான் அவர்கள் எந்த பிரச்சனையில் நியமா பேசினா? அதுதானே ஆர்.எஸ்.எஸ். அம்பி என்று சொல்றோம்.


    BY......தமிழச்சி.

    ReplyDelete
  3. Nalla pathivu nanri

    ReplyDelete
  4. Very nice article ////// thank u sister malar ////// Good job.....

    ReplyDelete
  5. rss மனச்சாட்சி அற்ற இயக்கம் தங்களுக்கும் ஒரு கேடு வரும் போதுதான் உணர்வார்கள் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்வை அவமதித்த அந்த இயக்கம் நாசமாய் போகட்டும்

    ReplyDelete
  6. rss in paarvayil eela makkal hinu illai .indiavil ullavarhal matume hindu.

    ReplyDelete
  7. உலக பயங்கரவாதி அமெரிக்கா புலி பயங்கரவாதியை மற்றும் RSS இயக்குகிறான்.

    ReplyDelete
  8. //rss மனச்சாட்சி அற்ற இயக்கம் தங்களுக்கும் ஒரு கேடு வரும் போதுதான் உணர்வார்கள் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்வை அவமதித்த அந்த இயக்கம் நாசமாய் போகட்டும்/

    வணக்கம் எஸ்தர் நலமா பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக உங்கள் கருத்து அமைந்துள்ளது நன்றி.

    ReplyDelete
  9. இந்த இரட்டை வேடத்தில் எது உண்மை முகம் புதுடில்லி, மார்ச். 19 இலங்கை அரசுக்கு எதிராக அய்நாவில் அமெ ரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். திடீர் எதிர்ப்பு காட்டி யுள்ளது.

    சுப்பிரமணியசாமி, சோ போன்ற ஒரு சிலர் தவிர, பிற மாநிலத்தவர் கூட ஈழத்தமிழருக்கு இலங்கைப் போரில் நிகழ்ந்த கொடூரத்தைப் பார்த்து ஆவேசப்பட்டு வருகின்றனர். மனிதாபி மானமும், தன் சொந்த மக்கள் மேல் அபிமானமும் இல்லாத இலங்கை அரசுக்கு பன்னாட்டு அளவில் பெரிய அளவிலான தண்டனை தரப்பட்டே தீர வேண்டும் என பல நாட்டு மக் களும் கருத்து கூறி வருகின்றனர்.

    இலங்கைக்கும் ஈழத் தமிழருக்கும் சம்பந்தமே இல்லாத 23 நாடுகள், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரிக்கும் போது, தொப்புள் கொடி உறவு உள்ளதாகக் கூறப்படும் இந்தியா மட்டும் இன்னும் மவுனம் காத்து வருகிறது. அந்த மவுனத்தை உடைத்து, இலங்கைக்கு எதிராக இந்தியா முடிவெடுக்க ப. சிதம்பரம் போன்ற வர்கள் முயன்று வரும் வேளையில், மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இலங் கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.

    அமெரிக்காவின் இந்த தீர்மானத் தின் மூலம் ஒரு ஜனநாயக அரசை அடி பணிய வைக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன என அந்த அமைப்பு 'புதுக்கரடி' விட்டுள்ளது.

    இலங்கைக்கு எதிரான தீர் மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா, ஆதரிக்காதா என் பதை உடனே தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தங்களுடன் நேரடியாக தொடர்பில் லாத விவகாரங்களில் தலையிடும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இந்தியா வலுவான நிலைப் பாட்டை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ். எஸ்.ஸின் ஆர்கனைஸர் பத்திரிகை தலையங்கம் வெளி யிட்டுள்ளது.

    இதன் மூலம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் நிழலில் செயல் படும் இயக்கத்தினர் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக சிலர் கொண்டிருந்த மாயை நொறுங் கியுள்ளது.

    பி.ஜே.பி.யோ அமெரிக்கத் தீர்மா னத்தை ஆதரிக்க வேண் டும் என்று நாடாளு மன்றத்தில் கொட்டி முழக்குகிறது பிஜேபி சொல்லுவது உண் மையா? அதன் அப்ப னான ஆர்.எஸ்.எஸ். கூறுவது சரியா!

    ReplyDelete
  10. avargalin paarvaiyil ilangai tamilargal hindukal illai.avargalai tamilarhalaga thaan paarkirargal.

    ReplyDelete
  11. avargalin paarvaiyil ilangai tamilargal hindukal illai.avargalai tamilarhalaga thaan paarkirargal.

    ReplyDelete
  12. where is HINDU MUNNANI?wat abt ramgopalji....arjun sampathji...?if u want to be hindu u shud not speak tamil!simple!!

    ReplyDelete
  13. eelam tamilanukku ennasolla vararu vidudhalai puligal ella muslimagalai kondrozhiththanar illai appadi paarththaal avargalukku edhiraaga seyalpaduvorai indhu thozhiladhibargalaiyum mattrum migaperum thalaivargaliyum kondranar thiru eelam tamilan avargale naamvenduvadhu vidudhalai puligalukkaaga illai makkalukkaanadhu dhayavuseydhu madhchchaayam poosavendaam appadinadappavargalil neenglalum oruvardhaan endraal vidudhalai puligalukkum ungalukkum verupaadu kidayaadhu nandri mannikkavum thiru raasaa avargale naan nigazhchchiyai paarkkavillai irundhaalum vedhanayaana padhivu

    ReplyDelete
  14. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். திடீர் எதிர்ப்பு காட்டி யுள்ளது.
    Anonymous ஆர்.எஸ்.எஸ். புலிகளை இயக்குவதே அமெரிக்கா தான் புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் அப்பன் அவனே.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!! மீண்டும் வருகை தாருங்கள் கருத்துக்கள் எழுதுங்கள். நன்றி!!