Nov 25, 2011

மாவீரர் தினமும் சுதந்திர வேட்கையும்!

NOV 26: வரலாறு  இரண்டு விடயங்களை  முக்கியமாக பதிந்துள்ளது. ஒன்று மாவீரர்கள் மற்றொன்று துரோகிகள்,  மாவீரர்கள் செய்த பாராக்கிரமங்களை புகழ்ந்தும், துரோகிகளை பற்றி  தூற்றியும் வரலாறு பதியத்தவறவில்லை.

ஈழத்திலே சிங்கள  பேரினவாத பயங்கரவாதிகளால் தமிழ்மக்கள் தொடர்ந்து இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வந்த காலம் அது. ஒரு காலச்சாரத்தில், பண்பாட்டில் பெண்கள் என்பவர்கள் அதன் ஆணி வேறாய் விளங்குகின்றனர். எனவே சிங்கள கயவர்களால்  திட்டமிட்டு தமிழ் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர்.

சிங்கள பயங்கரவாத, பேரினவாத அரசிடம் இருந்து நம்மை பாதுகாப்பவர்கள் யாரும் இல்லையா? என்று தமிழ் மக்கள் ஏங்கி நின்ற காலம் அது.  அப்போதுதான் பேரினவாத கயவர்களிடம்  இருந்து தமிழ் மக்களை காக்க புறப்பட்ட மாவீரகள் கூட்டமே நமது ஈழப்போராளிகள். தங்கள் இன்னுயிரையும் தந்து தமிழ் ஈழத்தை கட்டி  அமைத்த சிற்பிகள் அவர்கள். அவர்களது வீரம் வரலாறு எங்கும் கம்பிரமாக பதியப்பட்டுள்ளது.

அதுபோல் துரோகிகளை, கோழைகளை பற்றி வரலாறு பதியத்தவற வில்லை. அந்த வரிசையில் முதலிடம் இந்தியாவுக்கே. தான் வல்லரசு ஆகவேண்டும் என்கிற  போதை தலைக்கு ஏறி இலங்கையில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தலாம் என்று கற்பனை கோட்டை கட்டி, தனது மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் ஆறரை கோடி மக்களின் உணர்வுகளை காலில்போட்டு மிதித்து சிங்கள பேரினவாதிகளுக்கு முதன் முதலில் உதவி கரம் நீட்டியது இந்தியா. உதவிகரம் மட்டும் இல்லை இந்த துரோக திட்டத்தை தீட்டி கொடுத்த கயவர்களும் இவர்களே.  

குள்ளநரி ராஜபக்சே இந்தியாவின்  உதவியை மட்டும்  நம்பி இருந்தால்  நாளைக்கு இந்தியா என்ன சொல்கிறதோ அதை  கேட்டு அடிமையாக இருக்க வேண்டிய நிலைவரும் என்று எண்ணி  சீனா,  பாகிஸ்தான் இவர்களையும் இதில் இணைத்து கொண்டான்.  கடைசியில் இந்த குரங்குகளின்  கைகளில் கிடைத்த பூமாலையாக தமிழர்களின் 35 வருடகால போராட்டத்தில் அமைக்கப்பட்ட நாடும், இரண்டறரை இலட்சம் தமிழர்கள் உடலும், உயிரும் சிதைத்தெரியப்பட்டது.

வரலாறு துரோகிகளை  மன்னிக்காது, இந்த மாவீரர் தினத்தில் ஒவ்வொரு தமிழனும் ஒரு உறுதி எடுக்க வேண்டும் துரோகிகளை மன்னிப்பதில்லை என்று. ஒரு இனத்தின் போராட்டத்தையே கருவறுத்த துரோகிகள் இந்திய வல்லாதிக்கத்தினர் இவர்களுக்கு தக்க படம் படித்து கொடுப்பதே ஒவ்வொரு தமிழனின் சிந்தனையாக இருக்க வேண்டும்.

இந்த மாவீரர் தினத்தில்  ஒவ்வொரு தமிழனும் ஒரு உறுதி எடுக்க வேண்டும் ஈழத்து உறவுகளை கொல்ல காரணமாகவும், தமிழக மீனவர்கள் இன்றுவரை கொல்லப்பட காரணமாகவும், மொழி முதல் காவிரி, முல்லை பெரியார் அணை, கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி ஸ்டேர்லைட் ஆலைவரை தமிழர்களை கொல்லும், தமிழர்களின் நலன்களை கொல்லும் இந்தியாவில் இருந்து தனி நாடு காண்பது என்று.

ஒரு நாடு என்பது அந்த நாட்டில் வாழும் மக்களின் நலன்களை பாதுகாக்கவே. தமிழர்களை பாதுகாக்காத இந்தியா என்கிற நாடு நம்மை விட்டு அகன்று போகட்டும் சுதந்திர தமிழ் நாடு மலரட்டும். இனம் மற்றும் மொழி வழியாக தமிழர்கள் ஒரு பாரம்பரியம் மிக்கவர்கள். வடநாட்டு வடவர்கள் நம்மை ஆண்டது போதும். போலி தேசபக்தி பேசி தமிழர்களின் நலன்களை கொன்றது போதும். ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. சுதந்திரம் நமது பிறப்புரிமை! தனி தமிழ் நாடு நமது இலட்சியம்! என்று சங்கே முழங்கு. 
  *மலர்விழி* 

13 comments:

  1. நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. விழித்தெழு தமிழா,வென்றெடுப்போம் லட்சியங்களை,வேரறுப்போம் துரோகிகளை.பதிவுக்கு நன்றி.--தி.ரா.கரிகாலன்.

    ReplyDelete
  3. We don't wanna India! We have to get our own land. ..... Mekki perumal....

    ReplyDelete
  4. VerY nice article keep it up. Thank u malar. Malathi

    ReplyDelete
  5. Karikalan said tru......

    ReplyDelete
  6. அருமை அருமை நல்ல பதிவு தோழி மலர்விழி- க்கு வாழ்த்துக்கள் /.. இப்ப வருவான் பாருங்கள் தமிழனை ஜட்டி மாட்ட சொன்ன சண்டாளன் தமிழ்நேசன் =====இப்படிக்கு==தமிழ்ப்புரட்சிக்காரன்

    ReplyDelete
  7. IT IS PRICELESS. THE IMPORTANT THING TO REMEMBER THIS TIME IS TO HAVE MORE AND TIMELY EDUCATION.

    MOHAMED THAMEEM

    ReplyDelete
  8. மாவீரர்கள் தமிழர்கள்
    துரோகிகள் முஸ்லீம்கள்

    ReplyDelete
  9. இதற்கும் மேலாக காஷ்மீர் என்ற தனக்கு உரிமையில்லாத பகுதியில் இராணுவத்தை வைத்து அடக்கியாள்கிறது. இந்த இலட்சணத்தில் ஈழத்தினைப் பிரித்துக் கொடுப்பது தனது முந்தானையில் தானே தீ வைத்துக் கொள்வதற்குச் சமமென்று பாரதமாதாவுக்குத் தெரியாதா ? பாகிசுதானிடமிருந்து வங்காளதேசத்தைப் பிரித்துக் கொடுத்தது போல இந்தியா இலங்கைக்குச் செய்யாது. பாக், சீனா ஆகியவை சம அல்லது வலுமிகுந்த எதிரி நாடுகள் என்பதால் வங்காள தேசம், திபெத் என்று விடுதலை கேட்கிறது. ஆனால் இலங்கையோ மிகச் சிறிய நாடு இந்தியாவின் (பொருளாதார, அரசியல் ரீதியாக) அடிமை நாடு. அதை ஒன்றாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு வசதியானது. இப்படி தேசிய இனங்களைக் இரும்புப்பிடிக்குள் வைத்து, தலையில் எரிமலையாகிய காசுமீரையும் வைத்துக் கொண்டிருக்கையில் தனது காலுக்குக் கீழே ஒரு சில இலட்சம் பேர்களைக் கொண்ட ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த போராளிகள் வான்படை வைத்துக் கொண்டு தாங்கள் எதிர்த்துப் போராடும் நாட்டின் தலைநகரத்திலேயே வானவேடிக்கை நடத்தி வருவதை இந்தியா எப்படிச் சகித்துக் கொள்ளும் ?.

    ReplyDelete
  10. Muslimgal thurogi ok hinduthuva yaaru hinduthuva Indian military and ra ulavuththuraiyin sathi thaane Eelam aliya kaaranamaa amainthathu.

    ReplyDelete
  11. Amaithi padai panniya attoliyam maranthu poochchaa

    ReplyDelete
  12. We have to get out Tamil country soon....

    ReplyDelete
  13. Very good article thank u sinthikkavun

    ReplyDelete

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!! மீண்டும் வருகை தாருங்கள் கருத்துக்கள் எழுதுங்கள். நன்றி!!