May 7, 2011

இராம கோபாலனும், ஒசாமா பின்லாடனும் - ஓர் ஒப்பீடு!!

May 08, விமர்சனங்களுக்குட்பட்ட ஒசாமா கொல்லப்பட்டார். அவருக்கு தமிழ்நாட்டில் தொழுகை. இந்த பிரார்த்தனை தொழுகை இராம கோபாலனுக்கு பயங்கரவாதமாக தெரிகிறது.

ஒசாமாவால் கொல்லப்பட்டவர் எத்தனை பேர்? இரட்டை கோபுர கட்டிடங்களின் தகர்ப்புக்கு பின்னால் நடந்த அரசியல் சூட்சுமங்கள் என்னென்ன?

இந்தியாவில் இராம கோபாலன்களால் நடத்தப்பட்ட சாதி வெரிச்செயல்களினாலும், மத கலவரங்களினாலும் கொன்று குவிக்கப்பட்ட இந்திய உயிர்கள் எத்தனை?

இறந்துவிட்ட ஒசாமாவிற்கு தூக்கு தண்டனை கொடுக்கலாமா இராம கோபாலனின் ஆத்மா சாந்தி அடைய?

ஒசாமாவை ஆய்வு செய்யாமலேயே ஒரு பேச்சுக்கு பல ஆயிரம் மக்களை கொன்றதாக வைத்துக்கொண்டாலும், இந்த இராம கோபால் வகையராக்களால் கொல்லப்பட்ட என்னருமை இந்திய உயிர்கள் எத்தனை கோடிகள்?

இந்த வாழும் பயங்கரவாதிக்கு என்ன தண்டனை? கொடுக்குமா இந்திய அரசியல் சாசனச்சட்டம்? பல கோடி மக்களை விஷ வாயுவாலும், தீயாலும் கொன்றொழித்த ஹிட்லரின் வெற்றியை நமது கும்ப கோணத்திலேயே மிட்டாய் கொடுத்து போற்றிக் கொண்டடினார்களே இந்த ஈனப்பிறவிகளான இராமகோபாலன்கள்.

சரித்திரத்தை மீள்பார்வை செய்து அதே பாசிச கொள்கையிலேயே இன்னும் ஊறிகொண்டிருக்கும், ஹிட்லர் பாணியிலேயே அப்பாவி மக்களை தீயிட்டு பொசுக்கி சாகடிக்கும் இந்த இராம கோபாலனுக்கும் நரேந்திர மோடிக்கும், இரத்த யாத்திரை நடத்திய அத்வானிக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம்?

தொடர் குண்டு வெடிப்பு நடத்தி அதை வழக்கம்போல் அப்பாவி முஸ்லிம்களின் தலையில் போட்டு, பூனை வெளியே வந்தவுடன் அதை மறைக்க அன்ன ஹசாரே எனும் காந்தியம் பேசும் மனிதரை வைத்து உண்ணாவிரத நாடகம். அன்று இருந்தவன் ஒரே ஏகலைவன் இன்று பல்லாயிரம் ஏகலைவன்கள்.

மூன்று முறை தடை செய்யப்பட்டு தேசத்தந்தையையே கொன்றிருந்தும் அதை இன்றும்கூட நியாயப்படுத்தி பேரினவாதத்தின் செல்வாக்கால் மீண்டும் உயிர் பெற்று அணு தினமும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த இராம கோபாலன்கள் ஹிட்லரைகூட பயங்கரவாதி என்று விமர்சிக்க தகுதியற்றவர்கள்.

6 comments:

Anonymous said...

unmai

Anonymous said...

miha sariyaana unmai....

விஜயன்.கே.எஸ். said...

osaama ulagam islaamiya mayamaaga vEndum enru padukolaikali seythavan. raamagOpaalan appadippattavar allavE.

Anonymous said...

vijayan ungal thalaivanukku kudai pidippathai vittu unmaiyaana indianaaga sindhiyungal

Anonymous said...

நல்ல கட்டுரை

Anonymous said...

asiriyara nengaal muslima...romba vakkalathu